Skip to main content

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணிகளைப் பாதிக்குமா? ஆய்வுகள் சொல்வது என்ன..?

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

is covid vaccine safe for pregnant women

 

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்குப் பிறகு, நீங்கள் கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவரா? ஆம் எனில், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

கரோனா தடுப்பூசிகளின் மூலம் கரோனா வைரஸ் பரவும் வீரியத்தைப் பெரும்பகுதி நாம் குறைக்க முடிகிறது. இந்தியாவில், தற்போது ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்ஸின்’ ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 

இதில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனகா ஆகியவற்றின் கூட்டுடன் இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கோவாக்சின்’ தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தியாவில் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. எல்லாத் தேவையான காரணிகளையும் பூர்த்தி செய்யும் நிலையில், இந்த தடுப்பூசிகள் இனி வரும் நாட்களில் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும்.

 

இருப்பினும், இந்த தடுப்பூசியானது குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே சிலரால் பார்க்கப்படுகிறது. உலக சுகாதார மையம் கருவுற்ற பெண்களிடம், இந்த கரோனா வைரஸ் தடுப்பூசியைச் செலுத்துவதற்கு ஆரம்ப காலத்தில் ஆதரிக்கவில்லை. தற்போது, இந்த நிலைப்பாட்டினை மாற்றி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வழி வகை செய்துள்ளது.

 

கருவுற்ற பெண்களுக்கு இந்த கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானதா?

 

இதற்கு ஆதராகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலாவி  வருகின்றன.  

 

கரோனா தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டதிலிருந்து, குறைந்தது 8 வார காலத்திற்குக் கருவுறுதலைத் தவிர்க்குமாறும், கரோனா தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கக் கூடாது என்றும் ஒரு தரப்பு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர், கரோனா தடுப்பூசிகள் போடுவதற்கும் கருச்சிதைவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறி வருகின்றனர். இருப்பினும், இதுவரை எந்த ஒரு ஆராய்ச்சியிலும் இந்த தகவல்கள் எதுவும் சரி என நிரூபிக்கப்படவில்லை.

 

கர்ப்பிணிகளுக்கு என்று தனிப்பட்ட தடுப்பூசிகள் ஏதேனும் உள்ளதா?

 

உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசிகளை மக்களுக்குப் போடத் துவங்கியுள்ள நிலையில், இவற்றுள் கர்ப்பிணிகளுக்கு என்று தனிப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

கடந்த 2020ஆம் ஆண்டில் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. அவற்றில், பயன்பாட்டில் இருக்கும் முக்கிய தடுப்பூசிகளில், ‘ஃபைசர் - பயோஎன்டெக்’ தடுப்பூசி, ‘கோவாக்சின்’, ‘மாடர்னா’ தடுப்பூசி, ‘சினோபார்ம்’ தடுப்பூசி மற்றும் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவை அடங்கும். இந்த தடுப்பூசிகளின் செயல்தன்மை மற்றும் செயல்வீரியம் போன்றவை வெவ்வேறு மாறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். இவற்றுள், ‘கோவாக்சின்’ மற்றும் ‘கோவிஷீல்ட்’ பாரம்பரிய தடுப்பூசிகளாக இருந்தாலும், இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளைப் போலவே தயாரிக்கப்பட்டவை. ‘மாடர்னா’ மற்றும் ‘ஃபைசர் - பயோஎன்டெக்’ போன்றவை mRNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. இது கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கலாம் எனும் கருத்தும் நிலவுகிறது. இருப்பினும், இந்த இரு நிறுவனங்களும் தற்போது, தங்கள் தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கும் உகந்ததா என்று சோதனையை நடத்தி வருகின்றன.

 

எனவே, இந்தத் தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானதா? அல்லது இல்லையா? என்பதை முடிவு செய்ய மேலும் சில ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

 

கரோனா தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை உருவாக்குகின்றனவா?

 

கருவுற்ற பெண்களுக்கு கரோனாவிற்கான தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் ஏன் முன்னுரிமை அளிக்கப்படவில்லை? கரோனா தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை உருவாக்குகின்றனவா? என்பது குறித்தும் பல்வேறு தரப்பட்ட கேள்விகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

 

இருப்பினும், இந்த கரோனா தடுப்பூசிகள் மலட்டுத்தன்மை மற்றும் கருக்கலைப்பை உருவாக்குகின்றன என இதுவரை எந்த ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை.

 

இனி வரும் நாட்களில் கருவுற்ற பெண்களுக்கும் தடுப்பூசி சிறந்தது!

 

கர்ப்பிணிகள் கரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட பிறகு, தலை வலி, தசை வலி, காய்ச்சல், சோர்வு போன்ற சில ஆரம்பக் கட்ட உடல் உபாதைகளை எதிர்கொள்ளலாம். இவை, கர்ப்பிணிகள் மட்டுமின்றி தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் எதிர்கொள்ளும் உடல் உபாதைகள் ஆகும். இதுவரை தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் எந்த ஒன்றும் கர்ப்பிணிகளுக்கு உகந்ததல்ல என்று நிரூபிக்கப்படவில்லை.

 

எனவே, முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடத் துவங்கியுள்ள நிலையில், இனி வரும் நாட்களில் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்ததாக அமையும். இருப்பினும், கர்ப்ப காலத்தில் வேறு சில உடல் உபாதைகள் சந்திக்க நேர்ந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உரிய மருந்தினை எடுத்துக்கொள்வது நல்லது.  

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.