Skip to main content

39 ஆண்டுகளாக காதலிக்கு சாக்லேட் கொடுக்கும் காதலர்!

Published on 14/02/2018 | Edited on 15/02/2018
ron

காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி  உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று பல காதல்கள் துளிர்க்கும், சில காதல்கள் உதிரும். ஆனால் காதலித்து கரம் பிடித்தவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட  அந்த அற்புதம் நிகழ்ந்த நாளை நினைவுகூர்ந்து ஒரு அழகான உரையாடலும், பரிசு பரிமாற்றமும் இருக்கும். இதனை எத்தனை பேர் பின்பற்றுவார்கள் என்பது தெரியாது.  

ron

ஆனால்  நியூமெக்ஸிக்கோவைச்  சேர்ந்த  ரான் மற்றும் டோனா காதல் தம்பதி இணைந்து 39வது காதலர் தினத்தை ஆரம்பத்தில் இருந்த அதே காதலோடு கொண்டாடி வருகின்றனர். ஜனவரி 1979ஆம் ஆண்டு ஆல்புகெர்க்கியில் ஒரு இன்ஸுரன்ஸ் அதிகாரியாக ஒரு வீட்டு கதவைத் தட்டிய போது ஒரு பெண் கதவைத் திறந்தார். அந்தப் பெண்தான்  டோனா. அத்தருணம் இருவரின் எண்ண ஓட்டமும் ஒன்றாக மாறியது. அதன் பின் இருவரும் காதலர் தினம் அன்று சந்தித்து பேசியபோது ரான், "உனக்கு சாக்லேட் பிடிக்குமா?" என்று கேட்க, "ஆம், எனக்கு டார்க் சாக்லேட் மற்றும்  பஃப்பெட்ஸ் கேண்டி என்றால் ரொம்ப பிடிக்கும்" என்று சொன்னவுடன் அன்று முதல் 39 ஆண்டுகளாக காதலர் தினத்தன்று டார்க்  சாக்லேட்டை அதே கடையில் வாங்கி டோனாவிற்கு  பரிசளித்து வருகிறார் ரான். 

2014ஆம் ஆண்டு டோனாவிற்கு டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டு இருந்தபொழுது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தன் காதலி இருந்த நிலையை கண்டு வருந்தினார் ரான் . "2015 ஆம் ஆண்டு  அவள் மீண்டும் வீட்டிற்கு வந்தாள். ஆனால் அவளால் எழுத முடியவில்லை, பேச முடியவில்லை, அவளால் அன்று கழிவறைக்கூட செல்லமுடியவில்லை. அது தான் என் வாழ்வில் சோகமான நாளாக இருந்தது" என்கிறார் ரான் . இது பற்றி டோனா கூறியபோது, "என்னைப் பாதுகாப்பவர் இவர். நான் இவரை திருமணம் செய்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவரை நான் காதலிக்கிறேன்" என்கிறார். 

இதுமட்டுமல்லாமல் தற்போது இந்த காதலர் தினத்திற்கு ரான் டோனாவுக்கு  பரிசு வாங்கி அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Next Story

மீண்டும் ஒரு ஆணவக்கொலை; சென்னையில் பயங்கரம்

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Again a manslaughter; Terrible in Chennai

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். சல்லடையான்பேட்டை பகுதியில் சர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்த திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து நேற்று இரவு அந்த பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை அறிந்து கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.