Skip to main content

"தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அரசு பள்ளி"

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

மாவட்டத்தில் முதன்மை மாதிரி பள்ளியாக தேர்வு செய்த அரசு பள்ளியில் தலைமையாசிரியர் தரையில் அமர்ந்து மாணவர்களை வழிநடத்தும் செயல் பெற்றோர்களை பிரம்மிக்க வைக்கின்றது. "கல்வி நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்குப்பதிலாக காமராசர் வாழ்த்து பாடலாம்" என்றார் தந்தை பெரியார்.கல்விக்காக பல்வேறு சலுகைகளை அளித்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற காரணத்தால் காமராசர் பிறந்தநாளை ஆண்டு தோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். தேனிமாவட்டம் பெரியகுளம் வட்டம் சில்வார்பட்டியிலுள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு மாவட்டத்திலேயே மதன்மை மாதிரி பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசு பள்ளி இயங்கி வருகின்றது.அரசு பள்ளியை கண்டு விலகிச் சென்ற பெற்றோர்கள் இப்பள்ளியை கண்டு பெருமிதம் கொள்கின்றனர். தங்களது குழந்தைகளை இப்பள்ளியை தேடிவந்து சேர்க்கும் அளவிற்கு பெருமையை சேர்த்துள்ளது இப்பள்ளி.மாதம் ஒருமுறை பெற்றோர் அழைப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தி பெற்றோர்களின் நிறை குறையை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

government school

பள்ளி வளாகத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தப்பட்டு மிகவும் சரியான பராமரிப்போடும் இயங்கி வருகின்றது. இதனால் பெண்கள் மாதவிடாய் பிரச்னை காலங்களில் சந்திக்கக்கூடிய பரச்னைகளை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.சுமார் 10 ஏக்கர் பரப்பளவை கொண்ட இப்பள்ளியில் நூலகம்,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சிசிடிவி கேமரா, நவீன கணினி ஆய்வகம், உள் விளையாட்டு அரங்கம் மற்றும் (நபார்டு வங்கி நிதி உதவி ஆர்ஐடிஎப் திட்ட ஆண்டு 2014-2015) கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இப்பள்ளி. இப்பள்ளி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது அதில் சில : 1.சிறந்த பள்ளிக்கான விருது-2018 2.பசுமை பள்ளிக்கான விருது-2018 3.தூய்மை பள்ளிக்கான சான்று- 2017.

government school

போன்ற பல்வேறு விருதுகளை பெற்று தனியார் பள்ளிகளுக்கு ஒரு சவாலாக விளங்குகிறது.
இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.அதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் ஆங்கில வழிக்கல்வியில் பயின்ற மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக வந்த மாணவர்களை அப்பள்ளி தலைமையாசிரியர்  திரு.மோகன் அவர்கள் வரவேற்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்து மாணவர்களை வரவேற்றார்.கல்விக்கு  மட்டும் முன்னூரிமை அளிக்காமல் விளையாட்டு , இசை, ஓவியம் , தற்காப்புக் கலைகள் என பண்பாட்டு ரீதியாக அனைத்திலும் தங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி பல விருதுகளை பெற்று பெருமிதம் கொள்கின்றனர் ஆசிரியர்கள்.

government school

கல்வியோடு இயற்கையை மேம்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பேனிப்பாதுகாத்து வருகின்றனர்.அரசியலில் மாணவர்களின் ஆர்வத்தைத்தூண்டும் வகையில் மாணவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெரும் வெற்றியாளர்களுக்கு தலைமையாசிரியர் பதவி பிரம்மாணம் செய்து வைக்கின்றார்.தேர்தவை பற்றி தலைமையாசிரியர் கூறுகையில் எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி அரசியல் போன்ற எதிர்கால வாழ்க்கைக்கு கல்வி மட்டுமின்றி அரசியல் போன்ற எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் பாடத்தையும் கற்றுக்கொடுக்கப்படுகின்றது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பதவிகளிலுள்ள மாணவர்கள் சிறப்பாக செயலாற்றுகின்றனர்.குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்க்கும் மாணவர்கள் காலையிலும், மாலையிலும் பள்ளி வளாகத்தில் சுகாதார ரீதியாக எந்த ஒரு செயலாக இருந்தாலும் சிறப்பாக செய்து முடிக்கின்றனர். இத்தேர்தல் மூலம் மாணவர்கள் வருங்காலங்களில் சிந்தித்து செயல்படுவார்கள் என்பதே இதன் நோக்கம் என்கின்றார்.

தலைமையாசிரியர் திரு.மோகன் அவர்கள் மற்ற அரசு பள்ளிகளுக்கு விடுக்கும் மிகப்பெரிய வேண்டுகோள் மாணவர்களுக்கு பணியாற்றுவதற்காக தான் நாம் ஊதியம் பெறுகின்றோம். முதலில் மாணவர்களிடம் நெருங்கி பழகும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். மாணவர்களின் குடும்பச் சூழலை முதலில் அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் நாம் செயல்பட்டால் நிச்சயமாக அவர்களிடம் இருந்து ஒரு வெற்றியை நாம் எதிர்பார்க்கலாம் என்பதே என் வேண்டுகோள்.

 


பா.விக்னேஷ் பெருமாள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.