Skip to main content

உலகின் முதல் சோலார் நெடுஞ்சாலை! - தற்போதைய நிலை என்ன?

Published on 09/04/2018 | Edited on 09/04/2018

உலகின் முதல் சோலார் நெடுஞ்சாலை அல்லது போட்டோ வோல்டாயிக் சாலை கிழக்கு சீனாவின் ஜினான் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் போடப்பட்டு, சோதனைக்காக விடப்பட்டது. இந்த சாலை நிறுவப்பட்டு 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

China

 

இந்த சோலார் சாலை 1,120 மீட்டர் நீளமுள்ளது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த சாலையின் கீழ் அடுக்கில் இன்சுலேட்டர்களும், நடுவில் போட்டோ வோல்டாயிக் செல்களும், மேல் அடுக்குள் ஒளிபுகக்கூடிய கான்கிரீட்டும் பூசப்பட்டுள்ளன. அந்தப் பகுதியின் மிக முக்கியமான சாலை இது என்பதால், நாளொன்றுக்கு 40ஆயிரம் வாகனங்கள் இதைக் கடந்து செல்கின்றன. மேலும், வயர்லெஸ் முறையில் இது மின் கடத்தும் என்பதால், இதைக் கடந்து செல்லும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு சார்ஜ் தானாகவே ஏறிக்கொள்ளும். அதுமட்டுமின்றி, இதன் மூலம் உருவாகும் மின்சாரம் சுங்கச் சாவடிகள், மின் விளக்குகள், பெயர்ப்பலகைகள் என பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது. 

 

இது நிறுவப்பட்டுள்ள இந்த நூறு நாட்களில், எந்தவித பாதிப்பும் இன்றி 87 ஆயிரத்து 920 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது இந்த சாலையின் மீது பயணம் செய்ய பொதுமக்கள் காட்டும் ஆர்வத்தையே குறிக்கிறது என்கிறது அரசு. இருந்தாலும், பொதுமக்களிடம் கூடுதலாக கருத்து கேட்டபின், பிற இடங்களிலும் இதை நிறுவ முயற்சிக்கப்படும் என சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உலகின் முதல் சோலார் நெடுஞ்சாலை என சீன ஊடகம் இதைப் பெருமைப்படுத்தினாலும், பிரான்சு நாட்டில் 2016ஆம் ஆண்டு இறுதியில் இது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

உளவு பார்ப்பதாக கைதான புறா; 8 மாதங்களுக்குப் பின் விடுவிப்பு!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Pigeon arrested for spying and Released after 8 months

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைகள் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்க்கும் இது குறித்து பேசியுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, சீனா, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளின் பெயர்களை மாற்றியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாட்டுடன் சேர்த்து வரைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்படி மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், சீனாவில் இருந்து நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட புறாவை 8 மாதங்கள் சிறையில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பிர் பாவ் ஜெட்டி பகுதியில், கடந்த 2022 ஆண்டு மே மாதம் வித்தியாசமாக இருந்த புறா ஒன்று பிடிப்பட்டது. அந்த புறாவின் கால்களில் தாமிரம் மற்றும் அலுமினியத்திலுமான இரண்டு மோதிரங்கள் இருந்தன. மேலும், அந்த புறாவின் இரண்டு இறக்கையின் கீழ் பகுதியில் சீனா மொழியில் எழுதப்பட்ட செய்தி இருந்ததாக கூறப்படுகிறது. 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சீனாவில் இருந்து உளவு பார்ப்பதற்காக புறா வந்திருப்பதாக சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக ஆர்சிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த புறா சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதா? என விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பிடிப்பட்ட புறாவை மும்பை கால்நடை மருத்துவமனையில் உள்ள கூண்டில் சிறை வைத்தனர். 

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பிடிப்பட்ட புறா தைவானில் திறந்தவெளி நீர் போட்டியில் பங்கேற்கும் புறா என்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்த புறா உளவு பார்ப்பதற்காக வரவில்லை என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பிடிப்பட்ட புறாவை விடுவிப்பதற்கு போலீசாரிடம் கால்நடை மருத்துவமனை அனுமதி கோரியது. மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்றதை அடுத்து, 8 மாதங்களுக்கு பிறகு பிடிப்பட்ட புறா நேற்று முன்தினம் (30-01-24) விடுவிக்கப்பட்டது.