Skip to main content

கொரோனா வைரஸ் எதிரொலி - டிவி-யின் விலை உயர வாய்ப்பு?

Published on 21/02/2020 | Edited on 22/02/2020

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 



சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் சீனாவில் டிவி பேனல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் தொலைக்காட்சிகள் உற்பத்தி செய்யப்படுவதும் குறைந்துள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சிகளில் விலை 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. 

 

சார்ந்த செய்திகள்