Skip to main content

பெட்ரொல், டீசல் விலை 150% உயர்வு... இணையம் முடக்கம்... கலவர பூமியான ஜிம்பாப்வே

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

 

 

z
கோப்புப் படம்

 

ஜிம்பாப்வேவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதனால் அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. முதலில் இணைய சேவை முடக்கப்பட்டாலும் சிறிது நேரத்திற்குள் மீண்டும் சேவை வழங்கப்பட்டது. ஆனால், வாரம் முழுக்க ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளஙகளை மட்டும் அந்நாடு முடக்கியுள்ளது. 

 


கடந்த ஜனவரி 12-ம் தேதி அன்று ஜிம்பாப்வே அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலயை 150 சதவீதம் உயர்த்தியது. அதாவது பெட்ரோல் விலையை 1.34 அமெரிக்க டாலரில் இருந்து 3.31 அமெரிக்க டாலர் எனவும், டீசல் விலையை 3.11 அமெரிக்க டாலர் எனவும் உயர்த்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு சமூக வலைதளங்களையும், இணைய சேவையையும் முடக்கியுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த ஆப்பிரிக்க நாடு!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

COVAXIN

 

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில், கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்திருந்தது. கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவின் பாரத் பயோ-டெக் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டபோது, மூன்றாம் கட்ட சோதனை முடிவதற்கு முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்டது என சர்ச்சை எழுந்தது.

 

இருப்பினும் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. இந்தியப் பிரதமர் மோடியும் கடந்த ஒன்றாம் தேதி, கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இந்தநிலையில், பாரத் பயோ-டெக் நிறுவனமும், மூன்றாம் கட்ட ஆய்வகப் பரிசோதனையில், கோவாக்சின் தடுப்பூசி, 81 சதவீதம் செயல்திறன் கொண்டது எனத் தெரியவந்திருப்பதாக அறிவித்தது.

 

இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு ஜிம்பாப்வே ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்தநாட்டிற்கு, இந்தியா விரைவில் கோவாக்சின் தடுப்பூசியை அனுப்பும் எனத் தெரிகிறது. கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரித்த முதல் ஆப்பிரிக்க நாடு ஜிம்பாப்வே என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

உணவு, தண்ணீர் இல்லாமல் உயிரிழந்த 200 யானைகள்... காண்போரை கலங்க வைத்த புகைப்படங்கள்...

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

உணவு, தண்ணீர் இல்லாமல் பட்டினியால் 200 யானைகள் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

zimbabwe drought costs lives of 200 elephants

 

 

சர்வதேச அளவில் பருவநிலை மாறுபாடு குறித்து அதிக அளவில் விவாதிக்கப்பட்டு, அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது எனலாம். அந்த வகையில் ஜிம்பாப்வே நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, உணவு, தண்ணீர் இல்லாமல் பட்டினியால் 200 யானைகள் உயிரிழந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துவிட்டதால் அங்கு கடுமையான வறட்சி நிலவி வருவம் நிலையில், விலங்கியல் பூங்காக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகள் முழுவதும் வற்றி, மரங்கள், செடிகள் காய்ந்து தாவரங்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த மோசமான வறட்சியால் ஜிம்பாப்வேயில் நாட்டில் உள்ள வாங்கே தேசிய பூங்காவில் உணவு கிடைக்காமல்  200க்கும் மேற்பட்ட யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து  சிங்கங்கள், காட்டு நாய்கள், 50 காட்டெருமைகள், 40 ஒட்டகசிவிங்கிகள், 2000 யானைகள் ஆகிய விலங்குகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த யானைகள் பாதிக்கப்பட்டும், இறந்தும் உள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி, பலரையும் கண்ணீர் விட வைத்துள்ளது.