Skip to main content

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்; இந்தியா முன்னேற்றம்..!!!

Published on 30/01/2019 | Edited on 31/01/2019

 

ggffgfg

 

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018 ஆம் ஆண்டில் ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்தப்பட்டியலில் இந்தியா கடந்த 2017 ஆம் ஆண்டை விட 3 இடங்கள் முன்னேறி 78வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 81 ஆவது இடத்தில் இந்தியா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடுகளான சீனா, 87 வது இடத்திலும், பாகிஸ்தான் கடந்த ஆண்டு இருந்த அதே 117 வது இடத்திலும் உள்ளது. மேலும் ஊழல் மிகுந்த ஆசிய நாடுகளை பொறுத்தவரையில் மாலத்தீவு 31வது இடத்திலும், பாகிஸ்தான் 33வது இடத்திலும், இந்தியா 41வது இடத்திலும், மலேசியா 47 வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேரூராட்சி அலுவலகத்தில் சிக்கிய பணம்; 3 பேர் மீது பாய்ந்த வழக்கு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-bribery department seizes Rs 1 lakh  in Chethiyathoppu municipal office

சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பேரூராட்சி கணக்குகளை தணிக்கை செய்யும் பணியில் தணிக்கைக் குழு உதவி இயக்குநர் பூங்குழலி தலைமையில் தணிக்கை குழு ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பேரூராட்சி ஊழல் முறைகேடு கணக்குகள் குறித்து எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்காத வகையில் கணக்குகளை சரி செய்வதற்காக பெரிய அளவில் லஞ்சம் வழங்க உள்ளதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தேவநாதனுக்கு புதன்கிழமை தகவல் வந்துள்ளது.

அதன் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை மாலை திடீரென பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் இருந்துள்ளது.  இதனைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், கணக்கு தணிக்கை குழுவின் உதவி இயக்குநர் பூங்குழலி, தணிக்கை குழுவின் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வியாழக்கிழமை  வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.