Skip to main content

இம்ரான்கானுக்கு வாழ்த்து சொன்ன மோடி!!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018

 

pakisthan

 

 

 

பாகிஸ்தானில் ஜூலை 25-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் இம்ரான்கான்  வரும் 11-ஆம் தேதி பிரதமராக பதவியேற்க  இருக்கிறார். 

 

இந்நிலையில் நேற்று இம்ரான்கானுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மோடி அவர்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் பிரதமரானால் பாகிஸ்தானில்  ஜனநாயகம் வேரூன்றும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்