Skip to main content

ஈராக்கில் அடுத்தடுத்த குண்டுவெடிப்பு... 6 பேர் பரிதாப பலி!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019


ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 குண்டுவெடிப்புகளில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். பாக்தாத் நகரில் உள்ள அல்-சாப், அல்-பையா மற்றும் அல்-பலாதியாத் ஆகிய பகுதிகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனங்கள் வெடித்துச் சிதறின. மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
 

f



தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து பாக்தாத் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்