Skip to main content

ஹைதி நிலநடுக்கம்! - ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

HAITI

 

வட அமெரிக்க நாடான ஹைதியில், நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தநாட்டின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் மேற்குப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், இதுவரை 1,297 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 5,700 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் 13,600 கட்டிடங்கள் முழுவதுமாக இடிந்துள்ளன. 13,700 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஹைதிக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

 

அமெரிக்கா, ஹைதிக்கு மீட்புப்படைகளை அனுப்பியுள்ளது. இதற்கிடையே ஹைதி பிரதமர், அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Powerful earthquake in Sri Lanka

 

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

 

இலங்கையின் தெற்குப் பகுதியில் கடலின் நடுப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1,326 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.2 என சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவாகி உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Next Story

டெல்லியில் நிலநடுக்கம்

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

Earthquake in Delhi

 

டெல்லியில் திடீரென ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி என்.சி.ஆர், ஆக்ரா, சஜ்ஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வு காணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 3.1 என ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.