Published on 05/04/2021 | Edited on 05/04/2021
![jkl](http://image.nakkheeran.in/cdn/farfuture/BmoGGedeaNioG1G5QLlx097-Lx-2gI4K9a63OCFDjoM/1617620453/sites/default/files/inline-images/fdgxcvb_12.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 28 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் 13.31 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10.62 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.67 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1.03 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.25 கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.