Skip to main content

அருணாச்சலத்தில் சுரங்கம் மூலம் இந்தியாவை நெருங்குகிறதா? சீனா

Published on 21/05/2018 | Edited on 21/05/2018

அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதிகளில் ஒருசில பகுதிகளை ஏற்கனவே சீனா உரிமை கொண்டாடிவருகின்ற நிலையில் தற்போது அருணாச்சலப்பிரதேசத்தை ஒட்டிய பகுதியில் சீனா மிகப்பெரிய அளவிலான தங்கசுரங்கம் அமைப்பது இந்தியாவிற்கு சிக்கலை உருவாக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

china

 

 

 

அருணாச்சலபிரதேசம் -சீன எல்லைப்பகுதியான இகுன்ஸே பகுதியில் சீன அரசு தங்க சுரங்கம் ஒன்றை நிறுவப்போவதாக ஹாங்-காங்கிலிருந்து வெளிவரும் சவுத் சீனா மார்னிங் போஸ்டில் செய்தி வெளியாகியுள்ளது.

 

இந்த சுரங்கத்தில் 5700 கோடி டாலர் மதிப்பிலான தங்கம், வெள்ளி போன்ற தாதுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அமையவுள்ள சுரங்க பணி காரணமாக இமயமலையை ஒட்டிய அந்த நிலப்பரப்பு பகுதியில் சீன மக்கள்தொகை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ராணுவ நடவடிக்கையும் கையிலெடுக்கப்படலாம் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

china

 

இந்த ஆதிக்கம் தொடர்ந்தால் தென் சீன கடல் பகுதியை சீனா ஆக்கிரமித்ததை போன்ற நிலை மீண்டும் அருணாச்சலப்பிரதேச எல்லைப்பகுதியிலும் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மூன்று முறை நிலநடுக்கம்; பீதியில் அருணாச்சலப் பிரதேசம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
nn

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மூன்று முறை தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையாகவே தொடர்ச்சியாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகி வரும் நிலையில், அருணாச்சலப் பிரதேச மாநிலம் கிழக்கு காமெங் பகுதியில் அதிகாலை 5.13  மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது. கிழக்கு காமெங் பகுதியில் அதிகாலை 3.40 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது. அதே பகுதியில் நேற்று நள்ளிரவு 1.49 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுவும் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தொடர்ச்சியாக மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.