Skip to main content

வாலிபரை கடத்தி பணம் பறிப்பு; 4 பேர் கைது! 

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

youth money prisoners police arrested in salem

 

புகையிலை பொருள்களை கள்ளச்சந்தையில் விற்று வந்த வாலிபரை மிரட்டி பணம் பறித்த சிறை கைதிகள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் அன்னதானப்பட்டி பொடாரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). இவர் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட் புகையிலைப் பொருள்களை மளிகை கடைக்கு ரகசியமாக விற்பனை செய்து வந்தார். 

 

கடந்த மாதம் ஒரு கும்பல் அவரை தொடர்பு கொண்டு, தங்களிடம் அதிகளவில் குட்கா பொருள்கள் உள்ளதாக கூறியுள்ளனர். அதற்கு பிரகாஷ், தான் தற்போது அந்த தொழிலைச் செய்வதில்லை எனக்கூறியுள்ளார். ஆனால் குறைந்த விலைக்கு தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி பிரகாஷை மர்ம நபர்கள் 5 பேர், சேலம் ஊற்றுமலைக்கு அழைத்துச் சென்றனர். 

 

அங்கு பிரகாஷை கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள், வீட்டில் இருந்து அவருடைய தந்தை மூலமாக உடனடியாக 3 லட்சம் ரூபாயை எடுத்துவந்து கொடுத்தால்தான் உயிருடன் விடுவிப்போம் என்றும் மிரட்டியுள்ளனர். 

 

இதுகுறித்து பிரகாஷ் தன் தந்தையிடம் கூறியுள்ளார். அவரும் வீட்டில் இருந்து 3 லட்சம் ரூபாயை எடுத்து வந்து மர்ம நபர்களிடம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்கள், பிரகாஷை ஊற்றுமலையிலேயே விட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டனர். 

 

இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழிப்பறி வழக்கில் நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்த பிரகாஷ்,  வழிப்பறி கைதான நான்கு பேர் உள்ளிட்ட ஐந்து பேரும் சேர்ந்துதான் தன்னை கடத்திச்சென்று பணம் பறித்ததாக, அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கபாலி, மணிகண்டன், வீரமணி, சரத் உள்ளிட்ட 5 பேரும்தான் பிரகாஷிடம் கைவரிசைக் காட்டியது என்பதை அன்னதானப்பட்டி காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, சேலம் நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவர்களை கைது செய்வதற்கான ஆணையைப் பெற்றனர். 


கைது ஆணை கிடைத்ததை தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் இருந்த நான்கு பேரையும் அன்னதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களின் கூட்டாளி ஒருவரை தேடி வருகின்றனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.