Skip to main content

இளைஞர் மரணம்.... காவல்துறையினர் தீவிர விசாரணை!

Published on 15/08/2022 | Edited on 15/08/2022

 

youth incident cuddalore district police investigation

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ளது செவ்வேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது விவசாயக் கூலி தொழிலாளி ராஜேஷ். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 32 வயது பிரேமலதா என்பவருக்கும், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொளார் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது விஜயலட்சுமி சபிதா, என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ராஜேஷ். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ராஜேஷ், வேப்பூர் பகுதிக்கு கூலி வேலைக்குச் சென்ற இடத்தில் அங்கு வேறு ஒருபெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் இரண்டாவது மனைவி விஜயலட்சுமி சபிதா, ராஜேஷ், ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக் கொண்டு விஜயலட்சுமி சபிதா தாய் வீடான தொளாருக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சல் காரணமாக, ராஜேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

இதையடுத்து தற்கொலை செய்துக் கொண்ட ராஜேஷு உடலை அவரது உறவினர்கள், நேற்று மயானத்துக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்து  உடலை எறிவூட்டுவதற்கு ஏற்பாடு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த விஜயலட்சுமி சபிதாவின் தந்தை சுப்பிரமணியன் திட்டக்குடி காவல் நிலையத்தில் ராஜேஷ் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், செவ்வேரி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மயானத்தில் ராஜேஷ் உடலை எரியூட்டுவதற்கு தீ வைக்க உறவினர்கள் முற்பட்டனர். இதைக் கண்ட காவல்துறையினர் ராஜேஷ் உடலை ஏறியூட்டாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும், ராஜேஷ் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த திட்டக்குடி காவல்துறை டி.எஸ்.பி. காவியா, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

 

அதன் பிறகு, ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த திட்டக்குடி காவல்துறையினர், ராஜேஷ் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.