Skip to main content

இனி இப்படி ஒரு தலைவரை பார்க்க முடியாதுங்க... கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மூதாட்டி பேட்டி

Published on 15/08/2018 | Edited on 15/08/2018
thanjavur


சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கலைஞர் நினைவிடத்தில் இன்று (புதன்கிழமை) ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். சுதந்திரதினத்தையொட்டி விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. வரிசையில் நின்று அஞ்சலி செலுத்த காத்திருந்த பத்மாவதி என்ற 60 வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தோம்.
 

அப்போது அவர், கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்ட நாள் முதல் கவலையாகவே இருந்தது. என் மகன் கோவிந்தராஜ், தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நான் தஞ்சாவூருக்கு அருகே குலமங்கலத்தில் இருப்பதால் அவ்வப்போது கோவிந்தராஜுடம் கலைஞரின் உடல்நிலைப் பற்றி போனில் பேசுவேன். கடந்த 7ஆம் தேதி எங்களை விட்டு கலைஞர் சென்றார் என்பதை டிவியில் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். 
 

 

 

அன்றிலிருந்தே கோவிந்தராஜூக்கு போன் போட்டு, சென்னைக்கு வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்பேன். தினமும் மக்கள் கூட்டம் வந்துக்கிட்டே இருக்கு, கூட்டம் கொஞ்சம் குறையட்டும், மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லுவார்.
 

இன்றைக்கு சுதந்திர தினம், எனக்கும் லீவு கிடைக்கும் அழைத்துப்போவதாக சொன்னவுடன், குலமங்கலத்தில் இருந்து ஒரத்தநாடு வந்து, அங்கிருந்து தஞ்சாவூர் வந்து சென்னைக்கு வந்தேன். எனக்கு 60 வயதாகிறது. பயணம் ஒத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் கலைஞருக்காக இவ்வளவு தூரம் வந்தேன்.
 

 

 

எங்க குடும்பமே திமுக குடும்பம்தான். எனது மாமா, எனது கணவர் ரெங்கசாமி காலிங்கராயர் ஆகியோர் திமுகவில் இருந்தவர்கள். எனது கணவர் திமுக கிளைச்செயலாளராக இருந்துள்ளார். கலைஞரின் கொள்கைகள், அவரது பேச்சுக்கள் எங்களுக்கு பிடிக்கும். கலைஞர் பங்கேற்கும் கூட்டங்களில் நான் பலமுறை சென்று பார்த்துள்ளேன். தமிழக மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறார். இனி இப்படி ஒரு தலைவரை பார்க்க முடியாதுங்க என்றார் கண்கலங்கியபடி...

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.