Skip to main content

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பெண்கள்!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

The women who locked the Tasmac store!

 

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சி பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது.  இதனால் பலரது கணவர்கள் மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தைகளுடன் பெண்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதுடன் பல மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகும் நிலையும் உள்ளது. மது குடிப்பதற்காக வழிப்பறிகள் போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் நடப்பதாக கூறி டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை மீறி அதிகாரிகள் புதிய டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

ஏம்பல் சாலையில் வழிபாட்டுத் தலங்கள், மாணவர்கள் செல்லும் சாலை ஓரத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று கூறி போராட்டம் அறிவித்ததை மீறி போலீஸ் பாதுகாப்போடு டாஸ்மாக் திறக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை 400 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டதோடு பழைய டாஸ்மாக் கடைகளையும் மூடவைத்தனர். பெண்கள் திரண்டதால் டாஸ்மாக் ஊழியர்களே கடைகளை மூடினார்கள். அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவதுடன் கள்ளத்தனமான மது விற்பனையையும் தடுக்க வேண்டும். மதுக்கடை இல்லாத பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கூறி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

 

The women who locked the Tasmac store!

 

போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் புதிய டாஸ்மாக் கடையை உடனே மூடுவதாக அறிவித்ததோடு மற்ற இரு டாஸ்மாக் கடைகளையும் 3 மாதங்களில் படிப்படியாக மூடுவதாக உறுதியளித்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல கடந்த மாதம் கொத்தமங்கலம் ஊராட்சியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை ஒரே நாளில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.