Skip to main content

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த காதலி சரமாரியாக வெட்டி கொலை! காதலன் தலைமறைவு

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை நகர காவல்நிலையம் எதிரே புதன்கிழமை மாலை 5 மணியளவில் பரபரப்பாக இருந்தது. காவல்நிலையம் எதிரே நடந்து வந்துக்கொண்டுயிருந்த 45 வயது மதிக்கதக்க ஒரு பெண்மணியை, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சரமாரியாக வெட்டிவிட்டு தான் வந்த இருசக்கர வாகனத்திலேயே தப்பிவிட்டார். பட்டபகலில் சாலையில், காவல்நிலையம் எதிரே பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொலை மக்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.

 

 

 

பொதுமக்கள் அந்தயிடத்தில் கூடி உயிர் உள்ளதாக பார்த்தனர். துடிதுடித்து அவர் உயிர் பிரிவதை பொதுமக்கள் பார்த்து அதிர்ந்தனர். அந்த நேரத்தில் மழை பெய்ததால் ரத்தம் மழைநீரில் கரைந்து அந்த பகுதியே சிவப்பாக மாறியது. 
 

இராணிப்பேட்டை போலீசார் மற்றும் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வன் சம்பவயிடத்துக்கு வந்து உடனே சம்பவயிடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்டது யார்?. கொலை செய்தது யார்? என விசாரணை நடத்தியபோது, இராணிப்பேட்டை அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுகுணா. இவரது கணவர் இறந்துவிட்டார், தனக்கு ஆண் துணை வேண்டும்மென வாங்கூர் கிராமத்தை சேர்ந்த சுரேந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டு அங்கீகரிக்கப்படாத கணவன் - மனைவியாக வாழ்ந்துவந்துள்ளனர்.  


 

Woman killed and killed as a lady who complained to police station!

 

Woman killed and killed as a lady who complained to police station!


 

ஜீலை 10ந் தேதி சுரேந்திரன், சுகுணாவிடம் குடிப்பதற்கு 1000 ரூபாய் கேட்டு உள்ளார். சுகுணா கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் சண்டை வந்து வாய் சண்டை அடிதடியாகியுள்ளது. சுகணாவை செங்கல் கொண்டு தாக்கி உள்ளார் சுரேந்திரன். அதனை தொடர்ந்து ஜீலை 11ந் தேதி சுகுணா ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் சுரேந்தர் மீது புகார் கொடுக்க வந்துள்ளார்.
 

 

 

இதனை அறிந்த சுரேந்திரன் இருசக்கர வாகனத்தில் வந்து காவல் நிலைய எதிரே சுகுணாவை கத்தியை கொண்டு சரமாறியாக வெட்டி கொலை செய்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இறந்த சுகுணாவின் சடலத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.