Skip to main content

மலை கிராமங்களை நோக்கி படை எடுக்கும் காட்டு யானைகள்! - பீதியில் மலைமக்கள்!

Published on 11/08/2018 | Edited on 27/08/2018
elephant


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் ஒரு அழகிய இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளம். இது மேற்கு தொடர்ச்சி மலைகளை காப்பாற்றும் விதமாக தற்போது கொடைக்கானல் மலைப் பகுதிகள் வனச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியில் இருந்து பெருமாள் மலைப் பகுதிக்கு இடைப்பட்ட காடுகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. தங்களது உணவு மற்றும் நீர் தேவைகளுக்காக யானைகள் இடம் பெயர்வது வாடிக்கையான ஒன்றாகும். இதனால் அஞ்சுவீடு, அஞ்சுரான் மந்தை, பாரதி அண்ணா நகர், பேத்துப்பாறை உள்ளிட்ட பல மலை கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உணவிற்காக சேதப்படுத்தி வருகின்றன.
 

elephant


அதுபோல் மலை கிராமங்களுக்குள்ளையும் போய் வீடுகளை நாசப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஒரு சில நேரங்களில் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு உயிர்ப் பலிகளும் ஏற்படுகின்றன. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வழக்கமான வழித்தடங்களில் மட்டுமே யானைகள் இடம் பெயரும். தற்போது பெருகி வரும் கட்டிடங்கள் யானை வழித்தடங்களை மறைத்து கட்டப்படுவதால் இவைகள் எந்தப் பக்கம் செல்வதென்று அறியாமல் ரோடுகள் வழியாக கொடைக்கானல் மலை கிராமங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளன.

கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானல் பழனி பிரதான சாலையில் முகாமிட்டு பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இங்கு முகாமிட்டுள்ள யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணிகளை வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வழித்தடங்கள் அழிக்கப்படுவதால் வாழ்வாதாரத்தை இழந்து காட்டு யானைகள் திக்குமுக்காடி வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பீதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story

கோவில் திருவிழாவில் யானைக்கு மதம்;பக்தர்கள் பதறி அடித்து ஓட்டம்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
elephant Angry in temple festival; Devotees panic and run

கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்து பக்தர்கள் தெறித்து ஓடிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பூரம் திருவிழா என்பது மிகவும் விமரிசையானது. கேரளப் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் யானைகள் ஊர்வலம் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. அண்மைக்காலமாகவே திருவிழாக்களில் பங்கேற்கும் யானைகளுக்கு மதம் பிடிப்பது உள்ளிட்ட செயல்களால் பதற்றம் ஏற்படுவது வழக்கம்.

இதன் காரணமாக கேரளாவில் திருவிழா நேரங்களில் யானை ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் யானை பாதுகாப்பு படையினர் என்ற அமைப்பு கண்காணிப்பிற்காக நிறுத்தப்படுகிறது. இந்த நிலையில் பாலக்காடு மாவட்டம் சாலச்சேரி முளையம்பரம்பத்துக்காவு என்ற கோவிலில் பூரம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருவிழாவில் பங்கேற்க அலங்காரம் செய்யப்பட்டு யானைகள் அணிவகுத்து வந்தன. அதில் ஒரு யானைக்கு திடீரென மதம் பிடித்தது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த யானை பாதுகாப்புப் படை வீரர்கள் பாகங்களோடு இணைந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திடீரென யானைக்கும் மதம் பிடித்ததால் அந்தப் பகுதி இருந்த மக்கள் தலைதெறித்து ஓடினர். இந்த சம்பவத்தில் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் யானையானது மீட்கப்பட்டு அந்த இடத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டது.