Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் கொடுத்த முன்னாள் ஆசிரியர்கள்;வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை நட்ட இளைஞர்கள்!!

Published on 26/01/2019 | Edited on 26/01/2019

அணவயல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 515 மாணவ, மாணவிகளுக்கும் தென்னங்கன்றுகளை வழங்கினார்கள் முன்னால் ஆசிரியர்கள். சேந்தன்குடி கிராமத்தில் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை நட்டனர் சமூக ஆர்வலர்கள்.

 

 Former teachers who gave coconuts  trees to school students!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் தென்னை உள்ளிட்ட அமனைத்து மரங்களும் முற்றிலும் அழிந்துள்ளதால் கடந்த 2 மாதங்களாக அனைத்து விழாக்களிலும் மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர். 

 

அந்த வகையில் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் லெட்சுமிநரசிம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தலா ஒரு தென்னங்கன்று வழங்கும் முயற்சியில் அணவயல் ஓய்வு தலைமை ஆசிரியர் கணேசன் தலைமையிலான ஓய்வு ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர். அதன்படி சுமார் 515 தென்னங்கன்றுகளை அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்கினார்கள். 

 

இது பற்றி ஓய்வு ஆசிரியர் கணேசன் கூறியதாவது.. கீரமங்கலம், அணவயல், மாங்காடு, வடகாடு மற்றும் சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களின் வாழ்வாதாரம் மரங்கள். அதிலும் தென்னை மரங்களே விவசாயிகளை வாழ வைத்ததுடன் விவசாயிகளின் குழந்தைகளின் படிப்பிற்கும் உதவியாக இருந்தது. அப்படியான மரங்களின் அழிவு விவசாயிகளை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தென்னங்கன்று வழங்க திட்டமிட்டு ஓய்வு ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர்கள் இணைந்து ஒரு கன்று ரூ. 150 விலையில் தரமான தென்னங்கன்றுகளை வாங்கி 515 மாணவ மாணவிகளுக்கு வழங்கி உள்ளோம். இதே போல மற்ற பள்ளிகளுக்கும் வழங்கும் திட்டம் உள்ளது என்றார்.

 

 

அதே போல சேந்தன்குடி கிராமத்தில் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள் நடும் பணியில் தன்னார்வ இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். கீரமங்கலம் சென்ரல் ஜேசிஸ், ஈசா யோகா, மரம் வளர்ப்போர் சங்கம் இணைந்து உள்@ர் தன்னார்வ இளைஞர்களின் உதவியுடன் வீட்டுக்கு மரக்கன்றுகளை நட்டனர். சுமார் 400 வீடுகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி நடந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.