Skip to main content

கண்ணெதிரே தவறு செய்த மனைவி... அடித்துக் கொன்ற கணவன்

Published on 02/01/2019 | Edited on 02/01/2019

தனது கண் முன்னே, தன்னுடைய மனைவி வேறொரு நபருடன் நெருக்கமாக இருப்பதைக் கண்ட கணவன், கோபத்தில் அருகிலிருந்த இரும்புக் கம்பியைக் கொண்டு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவரின் மனைவி உயிரிழந்துள்ளார். உடன் இருந்த நபரோ அங்கிருந்து காயத்துடன் தப்பி ஓடிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

t

 

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு மனைவி விமலா மற்றும் காவிய ஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை உள்ளனர். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி ஞாயிறன்று கிரக பிரவேசத்தினை நடத்தியுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் இரவில் கணவன் மனைவி குழந்தை 3 பேரும் புதிய வீட்டில் தூங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலையில் தனது குழந்தை அழும் சத்தம் கேட்டு எழுந்த மாரிமுத்து, தனது மனைவியை பார்த்தபோது  அவர் காணாமல் இருக்கவே, ஏற்கனவே தங்கி இருந்த பழைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது தன்னுடைய மனைவி விமலா, அருகிலுள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்யும் இருபது வயது இளைஞர் குமார் என்பருடன் நெருக்கமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஆத்திரமடைந்து அருகிலிருந்த இரும்புக் கம்பியை எடுத்து இருவரையும் தாக்கியுள்ளார். இதில் லேசான காயத்துடன் குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் தப்ப முடியாமல் மாட்டிக் கொண்ட விமலாவை, மாரிமுத்து கம்பியால் அடித்துக் கொலை செய்து, தனது ஆத்திரத்தை தீர்த்துள்ளார். ஆத்திரத்தில் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக, தனது உறவினர்களிடம் மாரிமுத்து கண்ணீருடன் தெரிவித்துவிட்டு, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்து தன்னுடைய மனைவியைக் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காவல் நிலையம் வரை சென்று அங்கு இருவரையும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து மாரிமுத்தும் விமலாவும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் வேறொருவருடன் தொடர்பு ஏற்பட அது கொலை வரை சென்றிருக்கின்றது. இச்சம்பவத்தால் அனாதை ஆனது என்னவோ அந்த மூன்று வயது பெண்குழந்தைதான்.!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.