Skip to main content

ஈரோட்டுக்கு திடீர் விசிட் அடிக்கும் ஆளுநர் -வெளியான தகவல்!

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

Governor

 

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டல பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமூக மக்கள் தங்களின் அடையாள வீரனாக, தலைவனாக கொண்டாடுவது, சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையை. வெளிவராத சின்னமலையின் தியாக வரலாற்றை ஈரோட்டை சேர்ந்த ஆய்வாளர் புலவர் ராசு என்பவர் வெளிக்கொண்டு வந்தார். சின்னமலைக்கு புகழ் செய்யும் பொருட்டு மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் முதல்வராக இருக்கும் போது தீரன் சின்னமலையின் பூர்வீகமான ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை கிராமத்தில் சின்னமலையின் சிலை, நினைவு மணிமண்டமும் சென்னையில் சிலை அமைத்தும் பெருமை சேர்த்தார்.

 

வெப்படையை சேர்ந்த கொங்கு செங்கோட்டையன் என்பவர் முயற்சியால் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு தனியார் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பப்பட்டு அச்சமூக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து E.R.ஈஸ்வரன் தலைமையில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தீரன் சின்னமலை புகழை பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச் சென்றது. இதன் பலனாக கடந்த 20 ஆண்டுகளாக சின்னமலையின் நினைவு தினம் உள்ளுர் விடுமுறை விடப்பட்டு அரசு நிகழ்வாக நடத்தப்படுகிறது.

 

03.08.2022 (ஆடி18) புதன்கிழமை தீரன் சின்னமலையின் 217 வது ஆண்டு நினைவு தினம் ஒவ்வொரு அரசில் கட்சி மற்றும் அமைப்பு தலைவர்கள் நேரில் வந்து புகழ் அஞ்சலி செய்ய வழக்கம்போல் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவ்வருடம் திடீரென முக்கிய வி.வி.ஐ.பி. வருகிறார் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காகவே 3 ந் தேதி காலை சென்னையிலிருந்து ஓடாநிலை கிராமத்திற்கு வருகிறார். மதியம் 12 மணி முதல் 1.30 வரை ஆளுநர் ரவி அவர் சிலைக்கு மாலை அணிவிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆளுநருடன், பா.ஜ.க. அண்ணாமலை மற்றும் ஆதீன, சமய தலைவர்கள் சிலரும் உடன் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.