சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று அவரக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில்,
![vaiko](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wk8KIUaTyQerjzOsToq106YvAiC5JZBeb4MXlNEpyVY/1557839420/sites/default/files/inline-images/fhgfgh.jpg)
கோட்சே செய்தது ஒரு கொடூர செயல் என கமல்ஹாசன் கூறியதில் என்ன தவறிருக்கிறது. கோட்சேவுக்கு சிலை வைப்போம் என்று சொன்னவர்கள் மீது என்ன நடவடிக்கை பாய்ந்தது. கோட்சேவை பற்றி விமர்சித்தாலே தப்பு என்ற நிலைமைக்கு வருவது என்று சொன்னால் அது மிகவும் பெரிய ஆபத்து. மத நல்லிணக்கத்தை சிதைத்து ஒரு ரத்த களரியை ஏற்படுத்த வேண்டும் என சங்பரிவார் அமைப்புகளும், இந்துத்துவா அமை