Skip to main content

“முதல்வர் மற்றும் அமைச்சருக்கு மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்”-மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தலைவர்!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

We sincerely thank the Chief Minister and the Minister

 

மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் இனி சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்று இன்று சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தலைவர் சேம.நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செங்கல்சூளை அமைத்துக் கொள்ளச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டிருந்தது, நீதிமன்ற ஆணையும் பெற்றிருந்தும் கடந்த ஆட்சியாளர்கள் மண் எடுக்க அனுமதிக்காமல் அலைக்கழித்து வந்தனர்.

 

இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்வாதாரத்தை இழந்தனர். தி.மு.க ஆட்சி வந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இதுகுறித்து கடிதம் எழுதினேன். நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் அளித்து நிலைமைகளை எடுத்துக் கூறினேன். எங்களின் கருத்தை நன்கு கேட்டறிந்த பின் நான் முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து நல்ல முடிவை எடுக்கிறேன் என்று கூறினார். இதேபோன்று முதலமைச்சரின் செயலாளர் சண்முகம் அவர்களையும் நேரில் சந்தித்துப் பேசி மனு அளித்தேன். அவரும் இதற்கு உரியத் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். எங்களின் நியாயமானக் கோரிக்கையைத் தாயுள்ளதோடு பரிசீலித்த முதலமைச்சர் அவர்கள் பாப்பிரெட்டி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மண்பாண்டம் தயாரிக்கவும், செங்கல் சூளைகளுக்கும் மணல் எடுக்க அனுமதி கிடைப்பதில்லை என்று கவனயீர்ப்பில் கூறினார்.

 

அதற்குப்  பதிலளித்துப் பேசிய நீர்ப்பாசனம்  மற்றும் கனிமளவத்துறை அமைச்சர் துரைமுருகன், நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் அனுமதி பெற்று மண் பரிசோதனைக்கு பிறகே மண் எடுக்க வேண்டும் எனச் சூழல் இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு சார்பில் எடுக்கப்படும் மணலுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை எனக் கடந்த ஜூலை 30ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் விவசாயத்திற்கு மண் எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று அவரின் உத்தரவுப்படி தமிழக அரசு ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி 1.5 மீட்டர்க்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது கனிமவளங்களை எடுப்பது ஆகாது என்பதால் 1.5 மீட்டர் வரை மண் எடுக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

 

எனவே மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைப்பவர்கள் விவசாயிகள்  சுற்றுச்சூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார். எங்களின் பல வருடக் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து ஆட்சிக்கு வந்த 125 நாட்களிலே எந்தவித சான்றிதழ் பெறாமலேயே மண் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்த முதலமைச்சர், மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு மனதார நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

“பள்ளிவாசல், தர்காக்களுக்கு மானியத் தொகை ரூ.10 கோடியாக உயர்வு” - முதல்வர் அறிவிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Rs. 10 crore increase in grant to schools, dargahs says CM stalin

சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒன்றிய அமைச்சர் ஒருவர் திராவிட மாடல் தான் பிரிவினையை தூண்டுவதாக கூறியிருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறுவதைவிட நகைச்சுவை வேறு ஏதும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்ட இயற்றியது திராவிட மாடல். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளிவாசல், தர்காக்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகையை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது. உலமா ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு குடும்பம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5.45 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசு பதவியேற்றதும் முதல்முறையாக மின் மோட்டார் வசதியுடன் கூடிய ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செய்வோருக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது” என்றார்.