Skip to main content

எல்லாரையும் குஷிப்படுத்தனும்னா ஐஸ்க்ரீம்தான் விக்கணும்-விஷால் பேட்டி!!

Published on 23/06/2019 | Edited on 23/06/2019

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. 

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சுவாமி சங்கரதாஸ் அணி இடையே போட்டி நடைபெறுகிறது. 

vishal interview

நடிகர் சங்கத் தேர்தல் களத்துக்கு வந்த பாண்டவர் அணியை சேர்ந்த விஷால் செய்தியாளர்கள் சந்திக்கையில்,

நீதிபதி உத்தரவு கொடுத்து இருக்கிறார்கள் என்றால் அதை கண்டிப்பாக மதிக்க வேண்டும். எனவே கண்டிப்பாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை இதே இடத்தில் உடனே நடந்தால் ரொம்ப சந்தோஷம். ஆனால் நீதி அரசருக்கும், நீதிமன்றத்திற்கும் மிகப்பெரிய நன்றி வணங்குகிறேன்.

இந்த எலக்சன் சரியாக ஜூன் 23ல் நடந்ததற்கு நாங்கள் ரொம்ப பெருமைப்படுகிறோம், சந்தோஷப்படுகிறோம். எனக்கு கொடுக்கப்பட்ட பதவி பொறுப்பு பொதுச்செயலாளர்,  பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு வந்து சாதாரண விஷயம் அல்ல. நான் இப்ப எல்லாரையும் குஷிப்படுத்தனும் என்றால் ஐஸ்கிரீம் தான் விக்கணும் நான் தலைவராக இருக்க முடியாது என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்