Skip to main content

முத்த வீடியோவை வெளியிட்ட உளவுத்துறை! தலைமறைவாக எஸ்.எஸ்.ஐ!

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

தமிழக அரசியலில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் எப்போது எல்லாம் கொந்தளிக்கிறார்களோ அப்போது எல்லாம் சர்ச்சையை கிளப்பும் வீடியோகள் தீடீர் என வைரல் வீடியோக்கள் வெளியாவது வழக்கம். 

 

ஆனால் திருச்சியில் ஒரு சிசிடிவி வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினரை அதிர வைத்திருக்கிறது. திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐயாக இருந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு வயது 54, இவர் கடந்த 12ம் தேதி ஸ்டேஷனில் இரவுப் பணியில் இருந்த முதல்நிலை காவலர் சசிகலா அவருக்கு வயது 34 என்பவருக்கு தீடீர் என தொடர் முத்தம் கொடுத்து திக்குமுக்காட வைத்தார். 

 

 Underground

 

அப்போது அங்கு தற்செயலாக வந்த தனிப்பிரிவு ஏட்டு கேசவனிடம் சசிகலா இது குறித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் சசிகலாவின் புகாரை எஸ்பிக்கு அனுப்பினார். இதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஸ்டேஷனில் முத்தம் பரிமாறிக் கொண்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்த விவகாரம் தொடர்பாக பாலகிருஷ்ணன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கேமரா பதிவுகள் வெளியாட்களுக்கு போனது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை வெளியிட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகளை வெளியிட்டது எஸ்பிசிஐடி ஏட்டு தான் என தகவல் வெளியாகியுள்ளது.

 

சம்பவத்தன்று எதிர்பாராதவிதமாக ஸ்டேஷனுக்குள் நுழைந்த தனிப்பிரிவு ஏட்டு கேசவனால் அதிர்ச்சியடைந்த சசிகலா, எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன் சென்ற பிறகு அழுது கொண்டே முத்தம் கொடுத்தது குறித்து புகார் கூறினார். அப்போது கேசவன் அவர் இருக்கும் போது சொல்லாமல் இப்போது சொல்கிறாய் என்று சொல்லி விட்டு காலை இது குறித்து பேசிக் கொள்ளலாம் என்று கூறி விட்டு சென்று விட்டார். 

 

அப்போது தான் சசிகலாவிற்கு கேசவனுக்கு விபரம் தெரியாமல் இருக்கும் போதே தேவையில்லாமல் உளறி விட்டோம் என பதட்டம் அடைந்து உடனடியாக தனது உறவினரான எஸ்பிசிஐடி ஏட்டு நந்தகுமாருக்கு போன் செய்து பிரச்சனையாகி விட்டது உடனடியாக வருமாறு சசிகலா கூறியிருக்கிறார். அதற்குள்ளாக ஸ்டேஷனில் பதிவான காட்சிகளை தன்னுடைய செல்போனில் சசிகலா டவுன்லோடு செய்துள்ளார். அங்கு வந்த நந்தகுமாரிடம் விபரத்தை கூறிய சசிகலா தனனு செல்போனில் இருந்த காட்சிகளை, அவரது செல்போனுக்கும் அனுப்பியுள்ளார். 

 

 

தற்போது சசிகலா டி.எஸ்.பி ராதகிருஷ்ணன் விசாரணையில் நான் வீடியோவை வெளியிடவில்லை வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து எஸ்பிசிஐடி ஏட்டு நந்தகுமார்தான் வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என்கிறார்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம். 

 

இதற்கு இடையில் முதற்கட்ட விசாரணை முடிவில் தீடீர் முத்தம் கொடுத்த எஸ்.எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் தலைமறைவாகி முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

 

அதே நேரத்தில் புகார் கொடுத்த சசிகலா வீட்டிலும் சென்று போலிஸ் சோதனை நடத்தி வருகிறார்கள். முத்த சர்ச்சையில் சிக்கியா சசிகலாவிற்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அதே போல எஸ்.எஸ்.ஐ. பாலகிருஷ்ணனனுக்கு கல்யாணம் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.