Skip to main content

புதுசத்திரம் அருகே ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்கிறது- விவசாயிகள் கவலை

Published on 23/02/2019 | Edited on 24/02/2019

புதுச்சத்திரம் அருகே  நெல் நடவு செய்த ஆயிரம் ஏக்கருக்கு மேல் போதிய தண்ணீர் இல்லாமல் காய்ந்து நிலங்கள் பாலம்பாலமாக வெடித்துள்ளது.  இதனால் விவசாயிகள் கவலை அடைந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தண்ணீர் கேட்டு மனு கொடுத்துள்ளனர்.

 

n

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள வீராணம் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வாய்க்கால் வழியாக சென்று அதன் கிளை வாய்க்கலாக உள்ள  மானம் பார்த்தான் வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு தண்ணீவரும்.  இந்த வாய்க்கால் மூலம் புதுச்சத்திரம் அருகேயுள்ள அத்தியா நல்லூர், கொத்தட்டை, சேந்திரகிள்ளை, பால்வாத்துண்ணான், மணிகொல்லை, வேளங்கிப்பட்டு, வில்லியநல்லுர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம பகுதிக்கு உட்பட்ட ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.

 

மானம்பாத்தான் வாய்கால் 25 கிலோமீட்டர் தூரம் கடந்து கழுத்தை வெட்டி வாய்க்காலாக பெயர் மாற்றம் அடைகிறது.  இந்த வாய்க்காலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த கொஞ்சம் தண்ணீரை கொண்டு விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்துள்ளனர். தற்போது நடவு செய்து பயிர்கள் பச்சைபிடித்து வளரும் நேரத்தில் போதிய தண்ணீர்  இல்லாததால் நெற்பயிர்  காய்ந்து கருகி வருகிறது. மேலும் நிலங்கள் பாலம்பாலமாக தண்ணீரின்றி வெடித்துள்ளது. இதனை கண்ட விவசாயிகள் கண்ணீர்மல்க கவலை அடைந்து மனவேதனையில் உள்ளனர்.

 

n

 

இந்தநிலையில் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் கற்பனை செல்வம் தலைமையில் கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஜெயக்குமார், சேகர், ராயர் ஆகியோர் நிலமையை கருதில் கொண்டு சேத்தியா தோப்பு அனைக்கட்டு வாய்காலில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என்று  சிதம்பரம் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். மனுவை பெற்ற அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் அனுமதிபெற்று தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

 

இதுகுறித்து விவசாய சங்க தலைவர் கற்பனைச்செல்வம் இந்த பகுதியில் வறட்சியின் காரனமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் விவசாயிகள் நெல்நடவுசெய்துள்ளனர். அதுவும் தற்போது சரியான தண்ணீர் இல்லாததால் கருகும் நிலையில் உள்ளது. எனவே பொதுப் பணித்துறை அதிகாரிகள்  சேத்தியாதோப்பு அணைக்கட்டு வாய்காலில் உள்ள   தண்ணீரை உடனடியாக திறக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாய்க்காலே இல்லாத இடத்தில் எப்படி தூர்வாரினார்கள்” - விவசாயிகள் வேதனை

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

200 acres of direct sowing paddy crops have been damaged by rain

 

தொடர் மழையால் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பகுதியில் 200 ஏக்கர் நேரடி நெல் விதைப்பு பயிர்கள் அழுகியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்குட்பட்ட குமராட்சி அருகே உள்ள வாண்டையார் இருப்பு, வெள்ளூர், வெச்சூர்  உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட  கிராமப்  பகுதிகளில்  கடந்த 20 நாட்களுக்கு முன் விவசாயிகள் 500 ஏக்கருக்கு மேல் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். இதில் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளது. 

 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பெய்த தொடர் மழையாலும், வாண்டையார் இருப்பு, வெள்ளூர், வெச்சூர் பகுதியில் உள்ள ஊமையன் வாய்க்கால், நரிமோட்டு வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாலும் மேலும், அதனைத் தூர்வாராமல் புதர்மண்டிக் கிடப்பதால் மழைநீர் வடியாமல் கடந்த 3 நாட்களாக தேங்கி நிற்பதால் 200 ஏக்கருக்கு மேல் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அழுகியுள்ளது. இதில் சில விவசாயிகள் விளைநிலத்தில் தண்ணீர் விரைவில் வடிய வேண்டும் என்பதால் நீர் மோட்டார் பொருத்தி வயலில் தேங்கிய தண்ணீரை வடிய செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மழை அதிகமாக பெய்து தண்ணீர் வந்ததால் பயிர்களைக் காப்பாற்ற முடியாது எனக் கருதி வேதனையில் அப்படியே விட்டுவிட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் மற்றும் வேளாண் அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

 

இதுகுறித்து அப்பகுதியில் விவசாயம் செய்யும் கோவிந்தசாமி மற்றும் செல்வராஜ்  கூறுகையில், “இந்தப் பகுதியில் மழை பெய்து 3 மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிடும். தற்போது எப்போதும் இல்லாத அளவுக்குத் தண்ணீர் தேங்குவதற்கானக் காரணம் நரிமோட்டு வாய்க்கால் மற்றும் ஊமையன் வாய்க்கால், மேம்பாலத்து கன்னி ஆகிய வாய்க்கால்களில் தற்போது ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். வாய்க்காலைத் தூர்வாரவே இல்லை. இதனால் இந்தப் பகுதியில் தண்ணீர் வடிய மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் தான் 200 ஏக்கருக்கு மேல் நன்றாக வளர்ந்த நெற்பயிர்கள் மூழ்கி அழுகி விட்டது.

 

இந்த வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும் என்று பொதுப்பணித்துறையில் மனு அளித்தால், கடந்த 5 மாதத்திற்கு முன்பே தூர்வாரியாச்சு. அதற்கான தொகையையும் கொடுத்தாச்சு. இனிமேல் அடுத்த ஆண்டு தான் தூர்வார முடியும் என்கின்றனர். வாய்க்காலே இல்லாத இடத்தில் எப்படி தூர்வாரினார்கள்  என்று தெரியவில்லை.  இதுகுறித்து நடவடிக்கை  எடுக்க வேண்டும். தூர்வாரிய வாய்க்காலைக் காணவில்லை என இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து காவல்நிலையத்தில் புகாரளிக்க உள்ளோம். தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பகுதியானது தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான முட்டம் கிராமத்திற்கு அடுத்த கிராமம் ஆகும்.

 

 

Next Story

காட்டுமன்னார்குடியில் மலைகுறவர் சமூக மக்களுக்கு சாதி சான்று உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டம்! 

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

Demonstration in Kattumannargudi demanding basic facilities including caste certificate for the hill people community!

 

காட்டுமன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

காட்டுமன்னார்குடி அருகே உள்ள கொளக்குடி, ஓமாம்புலியூர், இலுப்பைத்தோப்பு, திருமூலஸ்தானம், கோயில் பத்து, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட இந்து மலைக்குறவர் மக்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் சிரமத்துடன் ஒரே குடிசைக்குள் 2 அல்லது 3 குடும்பங்களுடன் வசித்து வருகிறார்கள்.

 

இவர்களுக்கு குடி மனைப்பட்டா, அவர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார்.

 

மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், வட்ட குழு உறுப்பினர்கள் விமலகண்ணன், பொன்னம்பலம், தினேஷ்பாபு, சிங்கார வேலு,  கிளை செயலாளர்கள் தேசிங்கு தனபால் நீலமேகன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட இந்து மலைக்குறவர், இருளர் இன மக்கள் கலந்து கொண்டு மேற்கொண்டு கோரிக்கைகள் குறித்து கோசங்களை எழுப்பினர்.  இதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் குறித்தும் கடந்த சில நாட்களுக்கு முன் இலுப்பைதோப்பு பகுதியில் வசிக்கும் மலைகுறவர்கள் 10 குடும்பத்தினரைத் தாக்கிய ஆதிக்க சாதியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காட்டுமன்னார்குடி வட்டாட்சியர் ராமதாஸிடம் மனு அளித்தனர்.