Skip to main content

வேளாங்கண்ணி சுற்றுலா பயணிகளிடம் வம்புக்கிழுத்து உதைவாங்கிய காவலர்கள்!!

Published on 30/10/2018 | Edited on 30/10/2018

வேளாங்கன்னிக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பிய மினி பஸ்சை சோதனை செய்வதாக கூறி பெண்களிடம் அத்துமீறிய காவலர்களுக்கு அடி பின்னியெடுத்துவிட்டனர். விசாரணைக்காக  திருவாரூர்  காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 30 சுற்றுலா பயணிகளை 4 மணி நேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

 

police

 

கர்நாடக மாநிலம் பெங்களுர் நகர் பகுதியை சோ்ந்த ராஜேஷ் தனது குடும்பத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களுடன் தஞ்சைக்கு ரயிலில் வந்து மினி பஸ்சை வாடகைக்கு எடுத்து கொண்டு வேளாங்கன்னிக்கு ஒரு வாரம் சுற்றுலாவாக வந்துள்ளனர். இன்று தங்களது சுற்றுலாவை முடித்து கொண்டு பெங்களுருக்கு செல்ல தஞ்சையில் ரயில் ஏற மினி பஸ்சில் மூலம் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.



அப்போது திருவாரூர் அருகே சோழங்கநல்லூர் என்ற இடத்தில் மதுவிலக்கு காவல் பிரிவை சோ்ந்த காவலர்கள் இளவரசன் மற்றும் சங்கர் இருவரும் ரஜேஷ் குடும்பத்தினர் வந்த மினி பஸ்சை குறுக்கே நின்று  நிறுத்தினர்.  காவலர்கள் இருவரும் காவலர் உடையிலில்லாததால் மினிபஸ்சின் ஓட்டுநர் இருவர் லிப்டு கேட்பதாக நினைத்துக்கொண்டு பஸ்சை நிறுத்தாமல் சென்றுள்ளார். காவலர்கள் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் அந்த மினி பஸ்சை விரட்டி ஒரு கிலோமீீட்டர் தூரம் துரத்தி நிறுத்தினர், அப்போது ஓட்டுநரை பஸ்சை ஏன் நிறுத்த வில்லை என இருவரும் கேட்டு தாறுமாறாக திட்டிக்கொண்டே அடிக்கப்பாய்ந்தனர்.



அதோடு பஸ்சிற்குள் புகுந்து ஒவ்வொருவர் பைகளையும் சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.  பஸ்சில் உள்ள பெண்கள் எங்கள் உடமைகளை சோதனை செய்ய நீங்கள் யார் என்று கேட்டுள்ளனர். காவலர்களோ, இருவரும் போலீஸ் என கூற அடையாள அட்டையை காண்பிக்க சொல்லி சுற்றுலா பயணிகள் கூறியுள்ளனர். ஆனால் காவலர்கள் இருவரும் அடையாள அட்டையை காண்பிக்காமல் பெண்களிடம் அத்துமீறி அவர்களை தாக்கி தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர்.

 


இதனையடுத்து வாகனத்தில் இருந்த அனைவரும்  சேர்ந்து   இருவரும் காவலர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டு அவர்களை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம்  அறிந்த வைப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மினி பஸ்சுடன் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.


 

சுமார் 4 மணிக்கு அழைத்து சென்றவர்களை விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் அமர வைத்து விட்டனர். சுற்றுலா பயணிகள் அனைவரும் மாலை 7 மணிக்கு ரயிலுக்கு செல்ல வேண்டும் என எவ்வளவு எடுத்து கூறியும் காவல்துறையினரின் காதுகளுக்கு எட்டவில்லை.



 இந்நிலையில் இந்த செய்தி ஊடகங்களில் வெளி வர காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் துறையினர் தலையிட்டு சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகளிடம் வருத்தம் தொிவித்து அவர்களை விடுவித்தனர்.

 


சுற்றுலா பயணிகள் தாங்கள் விடுவிக்கப்பட்டதற்கு ஊடகத்துறையினருக்கு நன்றி தொிவித்துவிட்டு மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினர். இந்த சம்பவத்திற்கு காவல்துறையினர் காவல் உடையில்லாதததும் அவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பிக்காததும், பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டது தான் என சுற்றுலா பயணிகள் தொிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.