Skip to main content

ஆற்று சுழலில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிர் இழப்பு!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

Two young men trapped in a river and lost their lives

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகர பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். இவரது குடும்பத்தினர் தங்களது உறவினர்களுடன் விழுப்புரம் மாவட்ட அரகண்டநல்லூர் அருகிலுள்ள வீரமடை கிராமத்தின் அருகே ஓடும் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள குல தெய்வக் கோவிலான அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளனர். அந்த குல தெய்வத்தை உற்றார், உறவினர்கள், அங்காளி , பங்காளிகளுடன் வந்து வழிபாடு செய்வதற்காக கும்பகோணத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டு வந்துள்ளனர். சேதுராமன் குடும்பத்தினர் வரும் வழியில் திருக்கோவிலூரில் காலை உணவை முடித்துக் கொண்டு  அய்யனார் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து உள்ளனர்.

 

அடுத்து அய்யனாருக்கு பூஜை செய்வதற்கான பொருட்களுடன் படையில் போடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது பெண்களும் பெரியவர்களும்  பொங்கல் வைக்கும் பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சேதுராமன் மகன் அவினாஷ்(18) செந்தில் என்பவரது மகன் ஆகாஷ்(17) ஆகிய இரு இளைஞர்களும் கோவிலுக்கு அருகிலுள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது திடீரென இரண்டு பேரும் ஆற்றுச் சுழலில் சிக்கி கொண்டு கூச்சலிட்டு கத்தி சத்தம் போட்டுள்ளனர். இதைக் கேட்ட அங்கிருந்த சேதுராமன் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் இருந்த அந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் திரண்டு ஓடியுள்ளனர்.

 

 சுழலில் சிக்கித் தவித்த 2 வாலிபர்களையும் மீட்டு உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட மகிழ்ச்சியாக வந்த சேதுராமன் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கினர். இதையடுத்து சேதுராமன் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர்கள் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் திருக்கோவிலூர் அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் பறிபோன இளைஞரின் உயிர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
  life of the youth lost due to the negligence of the highway department!

கள்ளக்குறிச்சியில் இருந்து ஏமப்பேர், காரனூர் செல்லும் சாலையில் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் சாலை சீரமைப்பு பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினரால் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை விளம்பரங்கள் வைப்பது வழக்கம்.ஆனால்  தற்போது அதையெல்லாம் பல இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என நெடுஞ்சாலைத்துறை மீது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் சாலை சீரமைப்பு பணி நடந்து வரும் ஜெ.ஜெ நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை பலகை வைக்காததால் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குதிரைச்சந்தலை பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் ராசு(30) நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் பாலம் வேலை நடைபெறுவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாததால் சாலையில் அடுக்கப்பட்டிருந்த பாறையில் அவரது இரு சக்கர வாகனம் மோதி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ராசு பரிதாபமாக உயிரிழந்தார். நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தான் ராசு உயிரிழந்துள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.