Skip to main content

நெடுவாசல் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடிய வழக்கில் இருவர் ஆஜராக விலக்கு!!

Published on 17/10/2018 | Edited on 17/10/2018

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ந் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதனால் அடுத்த நாள் காலை நெடுவாசல் கடைவீதியில் கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய போராட்டம் காட்டுத்தீயாக பற்றி தமிழகம் மட்டுமின்றி கடல் கடந்தும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் கல்லூரி பள்ளி மாணவர்கள், அனைத்து கட்சிகள், திரைதுறையினர் சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தனர். இதனால் போராட்டம் அதிகரித்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டம் செயல்படுத்தப்படாது என்று ஒப்புதல் அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

 

 Two cases are appealing in the case against Nithuvasal Hydrocarbon in Keeramangalam.

 

அதே நேரத்தில் கீரமங்கலம், வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கருக்காகுறிச்சி, ஆலங்குடி போன்ற பல பகுதிகளிலும் இளைஞர்கள், விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இதில் கீரமங்கலத்தில் துரைப்பாண்டியன் தலைமையில் 7 பேர் மீதும், வடகாடு காவல் நிலையத்தில் வடகாட்டில் போராடிய ராஜகுமாரன் தலைமையில் 9 பேர்கள் மீதும், நல்லாண்டார்கொல்லையில் 4 பேர்கள் மீதும் ஆலங்குடியில் போராட்டம் நடத்திய வாலிபர் சங்க தோழர்கள் 40 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு வருடத்திற்கு பிறகு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் வடகாடு காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் உள்ளவர்களுக்கு சம்மன் கிடைக்கப்பெறவில்லை. அதனால் அவர்கள் 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆனால் ஆலங்குடியில் 40 பேரும்,  கீரமங்கலத்தில் இருந்து 7 பேரும் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர். 

 

 

இந்த நிலையில் இன்று திங்கள் கிழமை கீரமங்கலத்தில் போராட்டம் நடத்திய துரைப்பாண்டியன் உள்ளிட்ட 7 பேரும் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது.. 7 பேரில் இருவர் முகவரிகள் தவறாக உள்ளதாக கடந்த வாய்தாவில் மனு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த மனு பற்றிய விசாரணை செய்த நீதிபதி.. சம்மனில் உள்ள பெயர்களில் என்ன தவறு உள்ளது என்று விசாரணை நடத்தினார் அப்போது.. சேந்தன்குடி கண்ணன்.. எனது தந்தை பெயர் தங்கச்சாமி ஆனால் சம்மனில் தங்கையா என்று உள்ளது என்றார். அதே பொல கீரமங்கலம் குமார் என்பவர் எனது தந்தை பெயர் அய்யாவு ஆனால் ராமசாமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என்றனர்.

 

தவறாக உள்ள நிலையில் ஏன் ஆஜராக வேண்டும். அதனால் உங்களுக்கு சரியான முகவரியுடன் சம்மன் வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜரானால் போதும். அதுவரை வாய்தாக்களில் ஆஜராக வேண்டாம் என்று நீதிபதி கூறியுள்ளார். இதனால் இருவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .