Skip to main content

சபலிஸ்ட் இன்ஸ்பெக்டரால் சந்தி சிரிக்கும் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை..!

Published on 24/12/2018 | Edited on 24/12/2018

 

g

 

  " ஏய்..! நீ ரொம்ப அழாக இருக்கே.! என்னை கிறங்கடிச்சுட்டே.! ஐஸ்கிரீமை உருக வைச்சு உறிஞ்சு சாப்பிடுவதைப் போல உன்னை சாப்பிடனும்.! எப்ப உன்னைத் தருவே..? வா.! ஜாலியாக ஐஸ்கிரீம் சாப்பிடலாம்." என இரட்டை அர்த்தத்தில் பேசி  அழைத்ததும், " எனக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்கு.. நீ.! உம் பொண்டாட்டியை விட்டுட்டுப் போயிடனும்." என புருஷனை மிரட்டியதும் இரு வேறு புகார்களாக தட்டார்மட இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது பாய கிடுகிடுத்துள்ளது தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை.

 
 கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்த கான்ஸ்டபிள் மனைவி அட்லின் ரேபாவோ, " மளிகைக் கடைக்கு சென்ற என்னை வழிமறித்து " கலரா அழகா இருக்க.! உன்னை வைச்சி அவனுக்கு வாழத்தெரியலை..! உன்னை பார்த்த நாள் முதல் என்னைக் கிறங்கடிச்சுட்டே இருக்கே.! ஐஸ்கிரீம் பார்த்திருப்பிலே.! ஐஸ்கிரீமை உருக உருக வைச்சு உறிஞ்சி சாப்பிடுவதை போல உன்னை சாப்பிடனும். என் போன் நம்பரை வாங்கிக்கோ.! பேசு. சாப்பிடுவோம்." என பேசிக்கொண்டே போனார் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன். பொறுக்காத நானும் எஸ்.பி.ஆபிஸில் புகார் செய்துள்ளேன்." என்றார் அப்பொழுது.!

 

    அதன் பின் அந்த புகார் கிடப்பில் இருந்த நிலையில் தற்பொழுது, " என்னுடைய மனைவி தனலெட்சுமிக்கும் இன்ஸ்பெக்டர் கஜேந்திரனுக்கும் கள்ளத் தொடர்பு உள்ளது. கணையம் பாதிக்கப்பட்ட நான் இது குறித்து அவளிடம் கேள்விக் கேட்டேன். பதிலில்லை. அவளும், இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் பேசியதையும் போனில் ரெக்கார்டு செய்து வைத்திருந்தேன். இது தெரிந்த இன்ஸ்பெக்டர் என்னுடைய செல்போனை வாங்கி அதனை அழித்து விட்டு, மிரட்டி அனுப்பினார். ஆனால் இது நடக்கும் முன்பே எனக்குத் தெரிந்ததால் என்னுடைய சித்தப்பா, சித்தியிடம் கொடுத்து வைத்திருந்தேன். அதனைத் தெரிந்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் சித்தப்பா நயினார் மீதும் சித்தி ஜெயக்கொடி மீதும் பொய்யாக வழக்குப் பதிவு செய்து மிரட்டுகின்றனர். அவரின் பிடியிலிருந்து என்னுடைய மனைவியை மீட்டு எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்." என சாத்தான்குளம் துணைக்காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அனுப்பியுள்ளார் வள்ளுவர் தெரு, சாத்தான்குளம் தாமரை மொழியை சேர்ந்த ஜெகதீசன்.

 

  இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் பெண்கள் விவகாரத்தில் சபலிஸ்டு என்கிறது முந்தைய ரெக்கார்டுகள்.! டி.எஸ்.பி.யாக வேண்டியவர் இப்பொழுது வரை இன்ஸ்பெக்டராக இருக்கின்றார். பணியினை துஷ்பிரயோகம் செய்ததாக காவல்துறையில் அவர் மீது போடப்பட்ட 3பி மெமோக்கள் மட்டும் மொத்தம் 6. இதற்கு முன் ராமநாதபுரம் மண்டபம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பொழுது பிரபல கஞ்சா வியாபாரியான ஜெகதீஷ் மற்றும் கண்மணி தம்பதியினர் மீது நெருக்கம் இவருக்கு. மாத மாமூலுக்குப் பதில் தினசரி மாமூலாக கண்மணியிடம் உடலைப் பெற்றுக்கொள்வதுண்டு. அப்படி ஒரு நாள் மண்டபம் போஸ்ட் ஆபிஸ் தெருவிலுள்ள கண்மணி வீட்டிற்குள் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் செல்ல, இது தான் தருணம் என்று காத்திருந்த உள்ளூர் மக்கள் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த விவகாரத்தால் அப்போதைய எஸ்.பி.மணிவண்ணன் இவரை சஸ்பெண்ட் செய்தது தனிக்கதை. இவரின் சபல புத்தியால் பாதிக்கப்படுவது என்னமோ தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை தான்.!!

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.