Skip to main content

திருச்சியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்கள் ஆர்வம்

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

trichy anbil  trust conduct job fair mela

 

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் அன்பில் அறக்கட்டளை சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

 

அன்பில் அறக்கட்டளையின் நிறுவனரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழியின் துணைவியார் ஜனனி மகேஷ் பொய்யாமொழி இந்த வேலைவாய்ப்பு முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட  முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. முகாமில் கலந்து கொண்டவர்களில் 600-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் துணைவியார் வழங்கினார்.

 

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றுள்ள சுமார் ஆயிரம் பேருக்கும் மேல் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வில் விவசாயிகள் சங்கத் தலைவர் தெய்வசிகாமணி அன்பில் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, வாளாடி கார்த்திகேயன், கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்