![trichy airport unexpected security reason search passengers for sharjah flight](http://image.nakkheeran.in/cdn/farfuture/rEnjtISBKg_fZXlj4-uz4TxJvUIXuBmcGRRo0WJK5PY/1683636432/sites/default/files/inline-images/airport-art_0.jpg)
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, தேனி, திருச்சி ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிலும் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இதில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதே சமயம் தேசிய பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் என 25க்கும் அதிகமான அதிகாரிகள் சார்ஜாவில் இருந்து வந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷாப் என்பவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.