![today corona rate in tamilnadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/N4TM-nxyXQ_kXOYrvKXdWAIj4X9iYixmg_5U4tJ2dCo/1591793551/sites/default/files/inline-images/sfsfdfd_5.jpg)
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்1,927 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் தமிழகத்தில் ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 என்ற எண்ணிக்கை 11வது நாளாக தொடர்ந்து வருகிறது.
இன்று 1,008 பேர் கரோனாலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,841 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இன்று 16,667 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1,927 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஆறாவது நாளாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு 17,179 பேர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று உறுதியானவர்களில் 1,392 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் எட்டாவது நாளாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 என்ற நிலையில் தொடர்ந்து வருகிறது.
அதேபோல் சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு என்பது 26 ஆயிரத்து நெருங்குகிறது. இதுவரை 25,937 பேருக்கு அங்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை 260 பேர் சென்னையில் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது 326 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 19 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 7 பேரும், அரசு மருத்துவமனையில் 12 பேரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் 11 வது நாளாக கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது இரட்டை இலக்கத்தில் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.