Skip to main content

தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு!! 11-வது நாளாக இரட்டை இலக்கத்தில் தொடரும் உயிரிழப்பு!!!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
today corona rate in tamilnadu

 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்1,927 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் தமிழகத்தில் ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 என்ற எண்ணிக்கை 11வது நாளாக தொடர்ந்து வருகிறது.


இன்று 1,008 பேர் கரோனாலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,841 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இன்று 16,667 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1,927 பேருக்கு  கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆறாவது நாளாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு 17,179 பேர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று உறுதியானவர்களில் 1,392 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் எட்டாவது நாளாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 என்ற நிலையில் தொடர்ந்து வருகிறது.

 

 


அதேபோல் சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு என்பது 26 ஆயிரத்து நெருங்குகிறது. இதுவரை 25,937 பேருக்கு அங்கு கரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை 260 பேர் சென்னையில் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது 326 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 19 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 7 பேரும், அரசு மருத்துவமனையில் 12 பேரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் 11 வது நாளாக கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது இரட்டை இலக்கத்தில் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கனமழை எதிரொலி; பள்ளி விடுமுறை தொடர்பான அறிவிப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 Heavy rain echoes; Notification regarding school holidays

அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக வெளியிடப்பட்டிருந்த சென்னை வானிலை மைய அறிவிப்பில், ‘இன்று முதல் ஏழு நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவடங்களின் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்குக் கனமழை இருக்கும். அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரவும் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கனமழை எதிரொலி காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

என். ஐ.ஏ அதிரடி சோதனை; பென்டிரைவ், செல்போன்கள் பறிமுதல்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
 N. AI Action Test; Confiscation of pen drives, cell phones

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 'ஹிஜ்புத் தகர்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் உதவி புரிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு வெளிவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள ஹமீத் அக்பர் அகமது என்பவர் வீட்டில் சோதனையில் நடைபெற்ற வருகிறது. அதேபோல ஈரோட்டில் நடைபெற்ற சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்துவிட்டு கொளத்தூர் பகுதிக்கு விசாரணைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த சோதனைகளில் பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் பலரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.