Published on 28/12/2023 | Edited on 28/12/2023

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-7ஏ பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-1 (தமிழ்நாடு இந்து சமய அறநிலை சார்நிலைப் பணி) பதவிக்கான கணிணி வழி எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் : 22/2023, நாள் 13.10.2023-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-1 (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) 06.01.2024 முற்பகல் மற்றும் பிற்பகல் மற்றும் 07.01.2024 முற்பகல் நடைபெற உள்ளது.
வாசகர்கள் சாய்ஸ்: ‘தென் மாவட்ட மக்கள் கவனத்திற்கு’ - மின் வாரியம் முக்கிய அறிவிப்பு
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in- ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.