Skip to main content

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு... இடைத்தரகர் உட்பட 3 பேர் கைது!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்து, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதி நீக்கம் செய்துள்ள தேர்வாணையம் அவர்கள் 99 பேரும் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுத தடை விதித்துள்ளது.

 

 TNPSC Group 4..  3 persons including intermediary arrested!

 

அதேபோல் இந்த முறைகேடு குறித்து 12 பேரிடம் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவகலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இந்த முறைகேடு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு வைக்கப்பட்டுள்ள 12 பேரில் 2 தாசில்தார்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. கைதானவர்களின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. கைதான 3 பேரில் ஒருவர் இடைத்தரகர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்