Skip to main content

"சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு இருக்கும்" -மு.க.அழகிரி பேட்டி

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

tn assembly election mk alagiri pressmeet at madurai

 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, "தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும். புதிய கட்சித் தொடர்பான கேள்விக்கு போக போகத்தான் தெரியும். நவம்பர் 21- ஆம் தேதி நடக்கவிருந்த ஆலோசனை ஒத்திவைக்கப்பட்டது; விரைவில் நடக்கும். 

 

ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பின்தான் எந்த நல்ல முடிவையும் எடுப்பேன். தி.மு.க.வில் துரைதயாநிதிக்கு பொறுப்பு, அமித்ஷாவுடன் சந்திப்பு என்பவை அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள். பா.ஜ.க.வில் இணைவதாக வெளிவரும் தகவலும் வதந்தியே" என விளக்கமளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்