Published on 22/10/2019 | Edited on 22/10/2019

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வை எழுதுவதற்கு ஏற்கனவே 02.30 மணிநேரத்தில் கூடுதலாக 30 நிமிடங்கள் சேர்த்து மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும் என்றும், நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தால் கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.