Skip to main content

பாலியல் தொந்தரவு… - கல்லூரி முதல்வர் மீதும் வழக்கு பதிவானது.

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
harassment

 

திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் அரசு வேளாண்மை கல்லூரி உள்ளது. இங்கு தமிழகத்தின் பல பகுதிகைளச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர். இந்த கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனக்கு பல்கலைகழகத்தின் இணை பேராசிரியர் தங்கபாண்டியன், பாலியல் தொந்தரவு தந்தார். இதுப்பற்றி பெண்கள் விடுதி காப்பாளரும், உதவி பேராசிரியர்களுமான மைதிலி, புனிதா இருவரிடம் கூறினேன். அவர்களும் அவருக்கு உடந்தையாக என்னை அவருக்கு பணிந்து போகச்சொன்னார்கள், மிரட்டினார்கள் என வானாபுரம் காவல்நிலையத்தில் கடந்த ஜீலை மாதம் புகார் தந்தார்.


அவர்கள் புகாரை பெறவில்லை. இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானபின் இதுப்பற்றி திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேரடியாக அந்த மாணவியை சந்தித்து விசாரணை நடத்தினார். அதன்பின் பல்கலைகழகத்திலும் விசாரணை நடத்தி, காவல்துறையில் வழக்கு பதிவு செய்யச்சொன்னார். அவர்களும் விசாரணை நடத்தினார்கள், நடத்தினார்கள், நடத்திக்கொண்டே இருந்தார்கள். இந்த விவகாரத்தில் களமிறங்கிய திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகள் களமிறங்கி போராட்டம் நடத்தியது. அப்போதும் காவல்துறை அமைதியாகவே இருந்தது.


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அமைத்த விசாரணைக்குழு, கல்லூரி முதல்வர் மற்றும் இணை, உதவி பேராசிரியர்களை காப்பாற்ற முடிவு செய்தே விசாரணை நடத்தியது. தங்கபாண்டியனை மட்டும் தற்காலிக பணிநீக்கம் செய்தவர்கள், மைதிலி, புனிதா இருவரையும் அவர்கள் விரும்பிய இடத்துக்கு இடமாறுதல் மட்டும் செய்தனர். அந்த மாணவியை தஞ்சாவூர் கல்லூரிக்கு இடமாற்றியது. அந்த மாணவி நான் தவறு செய்யவில்லை, இங்கேயே தான் படிப்பேன் என இடமாறுதல் கடிதத்தை பெறவில்லை. இதனால் அவரை கல்லூரிவிட்டு நீக்கியது.


இது சமூகஆர்வலர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் சிபிஎம் கட்சி அடுத்தக்கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துயிருந்தது. இந்நிலையில் திடீரென திருவண்ணாமலை தாலுக்கா மகளிர் காவல்நிலையத்தில் வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், இணைபேராசிரியர் தங்கபாண்டியன், உதவிபேராசிரியர்கள் மைதிலி, புனிதா, இரண்டு மாணவிகள் என 6 பேர் மீது பாலியல் தொந்தரவு, பெண் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், குற்றவாளிக்கு உடந்தை, மிரட்டல் என 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

மர்மமான முறையில் மாணவர் மரணம்; விசாரணை நடத்த போலீஸார் தயக்கம்?

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Police reluctant to investigate student passed away in Vellore

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ளது கார்க்கூர் கிராமம். இங்கு  இயங்கி வரும் பாலாறு வேளாண்மை கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிரிஷின் நகரை சேர்ந்த ரவி எலக்ட்ரிஷியன் என்பவர் இளைய மகன் பிரதாப் (18) என்பவர் முதலாமாண்டு  படிக்கிறார். கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 10-ந் தேதி அரக்கோணம் சென்று தனது வீட்டில்  பெற்றோரை பார்த்து விட்டு மீண்டும் பிப்-12ஆம் தேதி திங்கள் கிழமையன்று கல்லூரிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி காலை சுமார் 6.00 மணியளவில் கல்லூரி ஹாஸ்டல் வார்டனிடம் ஜெராக்ஸ் எடுக்க அருகிலுள்ள மேல்பட்டி கிராமத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காலை 7.00 மணியளவில் மேல்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் காட்பாடி செல்லும் ரயில் மார்க்கம் பகுதியில் இருப்பு பாதையில் மாணவன் பிரதாப் தலை மற்றும் முகத்தில் படுகாயத்துடன் மயங்கி கிடந்ததை பார்த்த ரயில்வே பணியாளர்கள் மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக  மேல் பட்டி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் கிடந்த மாணவன் பிரதாப்பை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். 

அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரழந்தார். பாலாறு வேளாண்மைக் கல்லூரி, முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.சி வீரமணிக்குச் சொந்தமானது. இந்த கல்லூரி மாணவர்தான் இறந்துள்ளார், இது கொலையா? தற்கொலையா என தீவிரமாக விசாரணை நடத்த வேண்டிய போலீசார் இதில் மெத்தனமாக விசாரணை நடத்துகின்றனர். இது முன்னாள் அமைச்சரின் கல்லூரி என்பதால் அதற்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி நடப்பதாக இறந்த மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.