Skip to main content

தேர்தல்! மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலையிலும் சிக்கல்!

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

 

இந்தியாவில் 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேதியில் மதுரை சித்திரை திருவிழா நடைபெறுகிறது. அதனால் மதுரை தொகுதிக்கான தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுப்பற்றி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதசாகு.

 

t

 

இந்நிலையில் இதுப்போன்ற பிரச்சனை திருவண்ணாமலை தொகுதிக்கும் ஏற்பட்டுள்ளது. திருவ ண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் புகழ்பெற்றது. ஒவ்வொரு கிரிவலத்துக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்துக்காக வருவார்கள். சித்திரை மாத பௌர்ணமியன்று மட்டும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.

 

இந்த ஆண்டு சித்திரை மாத பௌர்ணமி, ஏப்ரல் 18ந்தேதி இரவு 7 மணிக்கு தொடங்கி மறுநாள் ஏப்ரல்19ந்தேதி மாலை 5 மணி வரை உள்ளது. இதனால் ஏப்ரல் 18ந்தேதி இரவு கிரிவலம் வருவது உகந்தது என கூறப்படுகிறது.

 

திருவண்ணாமலை, ஆரணி இரண்டு தொகுதிக்கான வாக்குப்பெட்டிகள் திருவண்ணாமலை நகரில் உள்ள சண்முக மேல்நிலைப்பள்ளியில், ஒழுங்கு விற்பனைக்கூடம் இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. இந்த இரண்டு இடங்களும் கிரிவலப்பாதையில் உள்ளன. இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலால் மாவட்ட நிர்வாகம், சிக்கலை தீர்க்க என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்திவருகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.