Skip to main content

நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை  பள்ளி மாணவர்களுக்கு  பாடமாக்க வேண்டும் -தங்கர் பச்சான்

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
ட்

 

நெல் ஜெயராமன் இறப்பிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 

’எல்லாவற்றையும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்  விட்டுச்சென்ற பணியைச் செய்ய யார் இருக்கிறார்கள்?

மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடியவர். அடுத்த தலைமுறைகளுக்காகவே வாழ்ந்தவர். நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை அரசு தொடர வேண்டும்.

 

எதை எதையோ பள்ளிப்பாடங்களில் கற்றுத்தருபவர்கள் விவசாயம் குறித்து கட்டாயம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.  தமிழக முதல்வர், வேளாண்மை அமைச்சர், பள்ளிக்கல்வி அமைச்சர் அனைவருமே  உழவு குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே அவர் விட்டுச்சென்ற  பணியைத்தொடர  கடமை இருக்கிறது!

 

நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை  பள்ளி மாணவர்களுக்கு  பாடமாக்க வேண்டும். அது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கர்பச்சானுக்கு ஜோதிடம் பார்த்த நபர் விடுவிப்பு

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
thankar bachan kili fortune released

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தங்கர் பச்சான், தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அப்பகுதியின் சாலை ஓரத்தில் இருந்த கிளி ஜோதிடரிடம் ஜோதிடம் பார்த்தார். அவருக்கு அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என ஜோதிடர் கூறினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

இதனைத் தொடர்ந்து தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் மற்றும் இன்னொரு ஜோதிடரையும் வனத்துறையினர் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்த அவர்கள், ஜோதிடக்காரர்களிடமிருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த கைதுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜோதிடர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வயதை கருத்தில் கொண்டு அவர்களிடம் பச்சைக்கிளியைக் கூண்டில் அடைத்து வைத்திருப்பது தவறு என அறிவுரையும் வழங்கி விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தங்கர் பச்சானுக்கு ஜோதிடம் பார்த்த நபருக்கு நேர்ந்த கதி!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
thankar bachan kili fortune teller arrested

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் என்.டி.ஏ கூட்டணியில் சார்பில் கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தங்கர் பச்சான், தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அப்பகுதியின் சாலை ஓரத்தில் இருந்த கிளி ஜோதிடரிடம் ஜோதிடம் பார்த்தார். அவருக்கு அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் என ஜோதிடர் கூறினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

இந்த நிலையில், தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள அவர்கள், ஜோதிடமிருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்தனர்.