Skip to main content

திருமயத்தில் விபத்தில் உயிரிழந்த 10 சடலங்களை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை கவுரவித்த தெலுங்கானா அரசு!!

Published on 09/01/2019 | Edited on 09/01/2019

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் மீது கண்டெய்னர்  லாரி மோதிய விபத்தில் ஐய்யப்ப பக்தர்கள் 9 பேர் உள்பட உயிரிழந்த 10 பேரின் உடல்களை தெலுங்கானாவுக்கு ஏற்றிச்சென்ற தமிழகத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அந்த மாநில அரசு அங்கு நேற்று சால்வை அணிவித்து கௌவுரவித்தது.

  

தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் நர்சபூர் பகுதியை சேர்ந்த 14  அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் சென்று தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 

 Telangana Government honored Ambulance drivers who carried 10 dead bodies

 

அப்போது புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஐய்யப்ப பக்தர்கள் வந்த சுற்றுலா வேன் மீது, புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் 9 ஐய்யப்ப பக்தர்கள் 9 பேர் என 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயத்துடன் வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை அப்பகுதி பொதுமக்களும் மீட்பு குழுவினரும் மீட்டு புதுக்கோட்டை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்த நிலையில் அங்கு வந்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் படுகாயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் உயிரிழந்வர்களின் உடல்களை தமிழக அரசு செலவிலேயே இறந்தவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறினார். அதன்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தமிழக அரசின் சார்பில் போலீஸ் பாதுகாப்புடன் 10 ஆம்புலன்ஸ்களில்  அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நர்சபூரில் அவர்களின் உறவினர்களிடம் சடலங்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

   

இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்களை  மீட்டு காயம் அடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதோடு உயிரிழபந்தவர்களின் உடலை உடனே அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த தமிழக அரசை தெலுங்கானா அரசு பாராட்டியதுடன்.  நர்சபூருக்கு உடல்களை ஏற்றி சென்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தெலுங்கானா அரசு சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நர்சபூர் வட்டாட்சியர் பிக்சாபதி மற்றும்  வருவாய்த் துறை, காவல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரம்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெகிழ்ச்சி செயல்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
election campaign; Minister Udayanidhi Stalin's resilience

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இருப்பினும் அங்கிருந்த கூட்ட நெரிசலால் அவ்விடத்தை விட்டு ஆம்புலன்ஸால் நகர முடியவில்லை. அதனைக் கண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆம்புலன்சிற்கு வழிவிடும் விதமாக உடனடியாக தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அதன் பின்னர் அம்புலன்ஸ் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றது. இச்சம்பவம் அங்கிருந்த திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வாணியம்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.