Skip to main content

டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி முதல்வர் பழனிசாமியை சந்திக்கும் போராட்டம் அறிவிப்பு

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

tt

 


பணி நிரந்தரம், மிகை பணிக்கு மிகை ஊதியம், காலமுறை ஊதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் முதல்வர் பழனிசாமியை சந்திக்கும் பேரணி அடுத்த மாதம் நடைபெறுகிறது என அதன் தலைவர் பெரியசாமி இன்று திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். 

 

அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பட்டுவரும் டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டு காலமாக சுமார் 30,000 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 240 நாள்கள் வீதம் 2 ஆண்டுகளில் 480 நாள்கள் பணியாற்றினால் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் முதலியன வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் நலச் சட்டங்கள் வலியுறுத்துகின்றன. இதுகுறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் அமல்படுத்தவில்லை. மேலும், தமிழக அரசு மூடிய மதுபானக் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதில் தொடர் பிரச்னை நிலவிவருகிறது. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் பணியாளர் குடும்பத்திற்கு 5,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

 


மது அதிகமாக விற்பனையாகும் கடைகளில் குறைந்த பணியாளர்களும், குறைவாக விற்பனையாகும் கடைகளில் அதிக பணியாளர்களையும் நியமித்து பாரபட்சம் காட்டிவரும் மாவட்ட மேலாளர்களின் நடவடிக்கையால் டாஸ்மாக் பணியாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு கொடுக்கும் பல்வேறு மன உளைச்சலில் 350-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். டாஸ்மாக் துறையில் ஊழல் மலிந்துள்ளதால் மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவர்களால் உருவாக்கப்பட்ட இடைத் தரகர்களை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலன இடங்களில் மதுபான கூடங்கள் அனுமதியில்லாமல் தனியார் டாஸ்மாக் போல் இயங்கி வருகிறது. இந்த மதுபானக் கூடங்கள் எல்லாம் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு பெரும் இலாபத்தை சம்பாதித்து அரசாங்கத்திற்கு பெரிய இழப்பு ஏற்படுத்துகிறார்கள். 
அது போல் டாஸ்மாக் பணத்தை துப்பாக்கி முனையில், அரிவாள் வெட்டி பல ஆயிரங்களை கொள்ளையடிக்கிறார்கள். டாஸ்மாக் ஊழியர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாநிலையில் இருக்கிறது. கொள்ளையடிக்கப்படும் பணத்திற்கு டாஸ்மாக் ஊழியர்களிடமே வசூல் செய்யும் நிலையும் இருக்கிறது. இதை எல்லாம் வலிறுத்தி அடுத்த மாதம் பிப்ரவரி 19-ம் தேதி தமிழக முதல்வரை சந்திக்க பேரணியாக தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் செல்கிறோம். முதல்வரை சந்திக்கும் வரை சென்னையில் இருந்து திரும்புவது இல்லை என்று முடிவுவெடுத்து உள்ளோம்’ என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.