Skip to main content

‘தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு' - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 10/09/2020 | Edited on 14/09/2020

 

tamilnadu rains chennai meteorological centre

 

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, தமிழகத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம், நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

 

tamilnadu rains chennai meteorological centre

 

 

மேலும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா (நீலகிரி)- 21 செ.மீ., நாமக்கல்- 13 செ.மீ., பென்னாகரம் (தருமபுரி)- 8 செ.மீ., உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி)- 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

 

கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதி, தென்மேற்கு அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்