Published on 29/04/2020 | Edited on 29/04/2020

இன்று தமிழகத்தில் 104 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் இதுவரை 2,162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா முதல்வருடன் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார் இந்த சந்திப்பு காணொளி வாயிலாக நடக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே கேரளாவும், ஒடிசாவும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்மாதிரியாக இருக்கும் நிலையில், கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.