Published on 17/07/2020 | Edited on 17/07/2020
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவக்காற்றில் ஏற்பட்டுள்ள திசைவேக மறுபாட்டின் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜுலை 18- ஆம் தேதி முதல் ஜூலை 22 ஆம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.