Skip to main content

5 கோடி தடுப்பூசிகளுக்கு டெண்டர் கோரியுள்ள தமிழக அரசு..! 

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

Tamil Nadu government seeks tender for 5 crore vaccines


இந்தியாவில் கரோனா வைரஸ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கத்தில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கை அறிவித்தது. அதன்பிறகு கிட்டத்தட்ட எட்டு மாதத் தொடர் ஊரடங்குக்குப் பிறகு பல தளர்வுகளுடன் முழு முடக்கம் விலக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய தடுப்பூசியான கோவாக்ஸின் மற்றும் அமெரிக்க தடுப்பூசியான கோவிஷீல்ட் ஆகியவை சந்தைக்கு வந்தது. 

 

இத்தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்ததும், முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் மத்திய அரசு அறிவித்தது. அதன் பிற்கு சில காலங்களி 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இத்தடுப்பூசிகள் இரு தவணைகளாக பயனாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 

 

45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசி பணியில் முதல் கட்ட டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள காத்திருந்த நிலையிலேயே மத்திய அரசு மே 1ம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டவரக்ளும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்தது. அதிலும், மாநில அரசுகள்தான் 18 முதல் 44 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசி இலவசமா அல்லது விலை கொடுத்து செலுத்திக்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும் தடுப்பூசி இலவசம் என அறிவித்தது. 

 

45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான இரண்டாம் டோஸ் முறையாக கிடைக்காமல் அவதிக்குள்ளாகிக்கொண்டிருந்தபோதே மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டோர்கான தடுப்பூசியை அறிவித்தது பல விமர்சனங்களை எதிர்க்கொண்டது. அதேபோல், 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசிக்கும் தடுப்பாடு ஏற்பட்டது. 

 

ஒரு கட்டம் வரை மத்திய அரசு மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை பிரித்து வழுங்கும் என்று தெரிவித்தது. பிறகு, மாநிலங்களே கரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது. ஆனாலும், மத்திய அரசுக்கு ஒரு விலையாகவும் மாநில அரசுகளுக்கு ஒரு விலையாகவும் இருவேறு விலைகளை தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் அறிவித்து. இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. பிறகு தடுப்பூசி மருந்து நிறுவனம் மாநிலங்களுக்கான விலையில் சற்றுகுறைத்தது. 

 

இருந்தபோதும் சீரான தடுப்பூசி விநியோகம் கிடைக்காமல் இருந்ததுவந்தது. இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கரோனா தடுப்பூசி கொள்முதலுக்கான  உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது. 

 

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கோரியுள்ளது. மூன்று மாதங்களில் ஐந்து கோடி தடுப்பூசிகள் வழங்க தயாரகவுள்ள நிறுவனங்கள் ஜூன் மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கோரியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு 20 கோடி தடுப்பூசிகள் வழங்கிய நிறுவனமாக இருக்க வேண்டும். அதில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 5 கோடி தடுப்பூசிகள் வழங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.