Skip to main content

'கிராமப்புற மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் தீர்ப்பு'- முதல்வர் பழனிசாமி!

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

supreme court judgement cm palanisamy

 

 

மருத்துவ மேற்படிப்பில் மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில், மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது கிராமப்புற மருத்துவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமையும்." என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்