Skip to main content

28 வயதான ஓட்டல் முதலாளிமகளுடன் சப்ளையர் சிறுவன் தொடர்பு! காதலுக்கு வயதும் இல்லை!!??

Published on 28/09/2018 | Edited on 28/09/2018

 

illegal love

 

காதலுக்கு கண் இல்லை  என்பார்கள்  ஆனால் தற்பொழுது வயதும் இல்லாமல் போய் விட்டது.

கேவைமாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் முருகன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மகள் செல்வியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து கொடுத்தும்கூட கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 28 வயதான  செல்வி கோர்ட்டில் விவகாரத்து  வாங்கி கொண்டு தனது தந்தைக்கு உதவியாக ஓட்டலில் இருந்து வருகிறார்.

 

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசெந்தூர் தொகுதிக்கு உட்பட்ட எரியோடு பாண்டிய நகரை சேர்ந்த ஆறுமுகசாமியின் 17 வயதான சிறுவன்  செல்வம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டில் சண்டை போட்டு கோவித்து கொண்டு மேட்டுப்பாளையம் போனவன் அப்பகுதியில் உள்ள முருகன் ஓட்டலில் வேலை கேட்டு இருக்கிறான். முருகனும் மனிதாபிமான அடிப்படையில் அந்த சிறுவன் செல்வத்தை வேலைக்கு சேர்த்து கொண்டார்.

 

அதன் அடிப்படையில் சிறுவன்  செல்வமும் ஓட்டலில் சப்ளை பண்ணி கொண்டு அங்கையே தங்கி வந்தான் இதனால்  ஓட்டல் முதலாளிமகள் செல்விக்கும் செல்வத்தும் முதலில் பேச்சு வார்த்தைதான் இருந்து வந்தது அது நாளடைவில் வயது வித்தியாசம் பார்க்காமல் காதலாக மாறியது. அதனையடுத்து இருவரும் தனியாக சென்று பேசிகொண்டு ஓட்டலை விட காதலை வளர்ப்பதில் தான்  ஆர்வம் காட்டி வந்தவர்கள். கடைசியில்  திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு போய்விட்டனர். இருந்தாலும் இருவருக்கும் வயது வித்தியாசம் ஏற்படுவதின் மூலம் இருவீட்டிலையும் திருமணத்திற்கு ஒத்துக்க மாட்டார்கள் என முடிவு செய்த காதல் ஜோடிகலான செல்வியும் செல்வமும் கடந்த வாரம் திடீரென  ஓட்டலில் இருந்து ஓடி விட்டனர். 

 

அதை கண்டு செல்வியின் தந்தையான முருகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற முருகன் என் ஓட்டலில் வேலைபார்த்து வந்த சிறுவன் செல்வம் என் மகள் செல்வியை கூட்டி கொண்டு ஓடிப்போய் விட்டான் என கண்கலங்கியவாரே புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் போலீசார் பல இடங்களில் தேடியும்  வந்தனர்.   

 

இந்த நிலையில் தான் வயதுக்கு மீறி காதலித்து திருமணம் செய்ய போகும் ஓட்டல் உரிமையாளர் மகள் செல்வியை தனது ஊரான எரியோட்டில் உள்ள பாண்டியராஜன் நகருக்கு செல்வம் கூட்டிகிட்டு வந்தான் அதை கண்டு அதிர்ச்சி பெற்றோர்களும் உறவினர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதொடு இருவரையும் சத்தம் போட்டனர்.  இதை கண்ட செல்வியும் செல்வமும்  எங்களை சேர்த்து வைக்க மாட்டீங்க என நினைத்து  அரளிவிதை அரைத்து திண்ணு விட்டோம் என திடீரென நாடகம் மாடி மயங்கி விழுவது போல் விழுந்தனர். அதை கண்டு பெற்றோர்களும் உறவினர்களும் பதறி அடித்து கொண்டு  இருவரையும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்பொழுதுதான்  இருவரும் மருந்து  குடிக்க வில்லை என்ற விஷயம் டாக்டர்கள் மூலமாக தெரியவந்தது.

 

அதன்பின் இந்த விஷயம் செல்வியின் பெற்றோருக்கு தெரிந்து மகளிர் காவல்துறையுடன் திண்டுக்கல் வந்து  இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு செல்வியை சத்தம் போட்டு பெற்றோருடன் அனுப்பிவைத்தனர் மகளிர் காக்கிகள். ஆனால் செல்வமோ தான் வீட்டுக்கு போக மாட்டேன் வாழ்ந்தால் செல்வியோடு தான் வாழ்வேன் என அடப்பிடித்தனர். ஆனால் சிறுவன் செல்வத்திற்கு  திருமண வயது இல்லை  என்பதால் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டனர். ஆனால் இப்படி வயதுக்கு மீறிய காதல் சம்பவம் மேட்டுப்பாளையம் எரியோடு பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தொடரும் சோகம்; வெள்ளியங்கிரி மலையேறுவோர் கவனத்திற்கு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Ongoing Tragedy; Attention Velliangiri Mountaineers

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி  மலை  மீது ஏற முயன்ற மூன்று பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (68) வயது. மருத்துவரான இவர் நேற்று நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். இன்று காலை நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த மூன்று பேரின் சடலங்களையும் கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 3 பேர் இதற்கு முன்னதாகவே இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதயக் கோளாறு, மூச்சுத்திணறல் பாதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.