Skip to main content

படிக்கும்போதே திருமணம் - இளம் ஜோடிகள் சஸ்பெண்ட்

Published on 26/09/2017 | Edited on 26/09/2017

படிக்கும்போதே  திருமணம் - இளம் ஜோடிகள் சஸ்பெண்ட்

கோவை மாவட்டம் சிவானந்த காலனி பகுதியைச்சேர்ந்த ஒட்டுனர் கிருஷ்ண ராஜின் மகன் சுதேஷ் .இவர் கோவை குரும்பபாளையம் ஆதித்யா பொறியியல் கல்லூரியில் டிப்ளமோ முடிந்து நேரடியாக பி இ எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் சேர்ந்து, தற்போது மூன்றாமாண்டு படித்து வருகிறார். இதேபோல அன்னூரைச்சேர்ந்த சாந்தினி மெகபூப் ஜான் அதே கல்லூதியில் படித்து வந்தவர்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் இரு குடும்பத்தினரும் இருவரையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் படிக்க கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர்.   கல்லூரி நிர்வாகம் கடந்த 30 ஆம் தேதி எந்த மூகாந்திரமும் இல்லாமல் இதுவரையும் சஸ்பெண்ட் செய்வதாக கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த உதவித்தொகையினை தற்போது தராமல் முழுத்தொகையையும் செலுத்த நிர்பந்திப்பதாகவும், எதுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டோம் என்ற காரணமும் தெரியாததால் மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுத்து உதவித்தொகை பெற்று  இருவரும் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்தனர்.

- அருள்

சார்ந்த செய்திகள்