Skip to main content

'முதல்வர் நேரில் வந்து சொல்லும் வரை போராட்டம் முடியாது'- திருமாவளவன் பேச்சு 

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில்  இன்று 7 வது  நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று விடுதலை சிறுதைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துக்கொண்டு பேசுகையில்,

 

The struggle will not be over until the Chief Minister comes in and says - Thirumavalavan talk

 

இச்சட்டத்திற்கு எதிராக நாங்கள் பிரகடனம் செய்யமாட்டோம் என்று கேரளா, பாண்டிச்சேரி அரசு முதல்வர்கள் சொன்னதை போன்று தமிழக முதல்வரும் நேரில் வந்து சொல்லும் வரை நாங்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள மாட்டோம் என்று, போராடிக்கொண்டு இருக்கிற உங்களை வரவேற்கிறேன். ஆளும் அதிமுக தற்போதுதாவது புரிந்துக்கொள்ள வேண்டும். இனியும் பிஜேபி உடனான கூட்டணியை முடித்துகொள்ளவில்லை என்றால் மக்கள் நம்மை விரட்டி அடிப்பார்கள். இதை அதிமுக கேட்கிறதோ இல்லையோ ஆனால் நிச்சயம் இவை நடந்துவிடும் என்கிற உணர்வாளர்கள்  இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

 

The struggle will not be over until the Chief Minister comes in and says - Thirumavalavan talk

 

இது தொடர்பாக முதல்வர் சட்டசபையில் சவால் விடுத்து இருக்கிறார். அது எதிர்கட்சி தலைவருக்கு விடுத்த சவலாக நான் கருதவில்லை, ஒட்டுமொத்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுகிறவர்களுக்கு விடுத்த சவாலாக நான் பார்க்கிறேன்.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றமே தடைவிதித்தபோதும் மெரினா போராட்டம் செய்த போராட்டம்தான் மத்திய மாநிலயரசும் ஒரு புதிய சட்டத்தை இயற்றியது அது தான் போராட்டத்தின் வெற்றி ஆகையால் ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடுவோம் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்